செப்பறை என்னும் சொல் செம்பினால் ஆகிய அறை என்று பொருள்படும்.
செப்புத் தகடுகள்
பொதிந்து கோட்டையின் மதில்களை வலுப்படுத்தும் முறை
முன்னாளில் கையாளப்பட்டதாகத் தெரிகின்றது.36 எனவே, செப்பறை
என்பது ஒரு சிறந்த கோட்டையாக இருந்திருத்தல் கூடும். இடிந்த மதிற்
சுவர்களும், உயர்ந்த மேடுகளும் இன்றும் அங்கே காணப்படுகின்றன.
அதற்கு அண்மையில் இராஜவல்லிபுரம்
என்னும் பெயருடைய சிற்றூர் ஒன்று
அமைந்திருக்கின்றது. சாசனத்தில் இராஜவல்லவபுரம் என்று
அவ்வூர்
வழங்கும். இவைகளில் எல்லாம் ஸ்ரீவல்லபன் என்னும் பாண்டியனது
கைவண்ணம் விளங்கக்
காணலாம்.37
பராக்கிரம
பாண்டியன்
பாரத நாட்டில் இந்துக்கள் போற்றும் புண்ணியத் தலங்களுள் தலைமை
சான்றது காசியாகும்.
இத்தகைய காசியைத் திசை நோக்கித் தொழுத
பழந்தமிழர் தமது நாட்டில் அப்பதியின் பெயரைச்
சில ஊர்களுக்கு
அமைத்துள்ளார்கள். சிவகாசி, தென்காசி முதலிய ஊர்கள் வடகாசியை
நினைவூட்டுவனவாகும்.
தென் பாண்டி
நாட்டில் தென்காசியைச் சிறக்கச்
செய்தவன் பதினைந்தாம் நூற்றாண்டில்
அரசு செலுத்திய பராக்கிரம
பாண்டியன். சிவநேயச் செல்வனாகிய
அம்மன்னன் கங்கைக் கரையில்
உள்ள
காசி விசுவநாதரின் கோலத்தைச்
சித்திரா நதிக்கரையிற் கண்டு வணங்க
ஆசைப்பட்டு,
அங்கு விசுவநாதர்
கோயிலைக் கட்டினான். திருப்பணி
முற்றுப் பெறுவதற்குப் பதினேழு
ஆண்டுகள்
ஆயின என்று சாசனம்
கூறுகின்றது. தென் காசியில் கோயில்
கொண்ட விசுவநாதர் |