பெயர் பெற்றுப் பிற்காலத்தில் கொழுமம் எனத் திரிந்ததென்று அறிந்தோர்
கூறுவர்.
கோவை நாட்டைச் சேர்ந்த உடுமலைப்பேட்டை வட்டத்தில்
கொழுமம் ஒரு சிற்றூராக இன்று
காணப்படுகின்றது.
சோழீச்சுரம் என்னும்
பழைமையான சிவாலயம் இவ்வூரில் உண்டு.
பன்னிரண்டாம் நூற்றாண்டின்
தொடக்கத்தில் கொங்கு நாட்டை யாண்ட
வீரசோழன் அங்கே கட்டிய கோயில் விரசோழீச்சுரம்
என்னும் பெயர்
பெற்றுப் பின்னர்ச் சோழீச்சரம் எனக் குறுகி வழங்கலாயிற்று என்பது
சாசனங்களால்
விளங்குகின்றது. கொழுமத்திற்குத் தெற்கே காதவழிகளால்
விளங்குகின்றது. கொழுமத்திற்குத்
தெற்கே காதவழி தூரத்திற் காணப்படும்
குதிரை மலையே பழைய முதிர மலை என்பர். முதுகிற் சேணமிட்டு
நிற்கும்
குதிரை போன்று இம் மலை காட்சி யளித்தலால் பிற்காலத்தார் அதனைக்
குதிரை
மலை என்று அழைத்தனர் போலும்!123
வள்ளலூர்
கோயம்புத்தூருக்கு அண்மையில் வள்ளலூர் என்னும் அழகிய
பெயருடைய ஊர் ஒன்று உள்ளது. அங்குள்ள
சிவன் கோவிலுக்குத்
தேனீச்சுரம் என்பது பெயர். உலகளந்த
பெருமாள் கோவிலும் அங்குண்டு.
பழைய
பேரூர் நாட்டைச் சேர்ந்த இவ்வள்ளலூர்
அன்னதான சிவபுரி
எனவும் வழங்கிற்று.124 எனவே, அன்னதானத்தால்
அழியாப் புகழ் பெற்ற
வள்ளல் ஒருவரது ஞாபகச் சின்னமாக இவ்வூர்
விளங்குகின்றது என்று
கூறலாகும். இந்நாளில் இவ்வூரின் பெயர் வெள்ளலூர்
என மருவியுள்ளது. |