150ஊரும் பேரும்

இயற்றிய செய்யுளும் கிடைத்துள்ளன. தென் ஆர்க்காட்டு விருத்தாசல
வட்டத்தில் பெரு முளை, சிறு முளை என்ற இரண்டு ஊர்கள் உண்டு.
மிளையென்பது முளையென மருவி வழங்குதல் இயல்பாதலால் அன்னார்
அவ்வூர்களில் ஒன்றைச் சேர்ந்தவராக இருத்தல் கூடும்.
 

குறுங்கோழியூரார்


      பழந் தொகை நூல்களில் குறுங்கோழியூர் கிழார் என்னும் சொல்
வேளாளரைக் குறிக்கும். ஆதலால், அப் புலவர் குறுங்கோழியூரைச் சேர்ந்த
வேளாளர் என்பது விளங்கும். முன்னாளில் குறுங்கோழி என்று தொண்டை
நாட்டிற் பெயர் பெற்றிருந்த ஊர் இப்போது  கருங்குழி எனச்
செங்கற்பட்டிலுள்ள மதுராந்தக வட்டத்தில் உள்ளது.
 

பெருந்தலைச் சாத்தனார்

     முற்காலத்தில் இருந்த மற்றொரு புலவர், பெருந்தலைச்சாத்தனார்
என்று குறிக்கப்படுகின்றனர். குமணன் என்னும் சிறந்த வள்ளலைக் காட்டிலே
தேடிக் கண்டு சோகம் நிறைந்த சொற்களால் அவன் உள்ளத்தை உருக்கி,
அவன்பால் தலைக்கொடை பெற்ற புலவர் இவரே. பெருந்தலை என்னும்
ஊரிற் பிறந்த சாத்தனார், பெருந் தலைச் சாத்தனார் என்று அழைக்கப்
பெற்றார். அவ்வூர், பெருந்தலையூர் என்னும் பெயரோடு கொங்கு நாட்டில்
இன்றும் காணப்படுகின்றது. குமண வள்ளலுக்குரிய நாடும் கொங்கு நாட்டின்
ஒரு பாகமேயாகும். கொங்கு நாட்டைச் சேர்ந்த புலவர் ஒருவர் கொடிய
வறுமையால் துன்புற்ற நிலையில் கொங்கு நாட்டு