குலமும் கோவும் 151

வள்ளலை நாடிச் சென்று அவனிடம் தன் குறையை முறையிட்டார் என்பது
மிகப் பொருத்தமாகவே தோற்றுகின்றது. இவ்வாறே சீத்தலைச் சாத்தனார்
என்னும் புலவரையும் சீத்தலை என்னும் ஊரிற் பிறந்தவர் என்று
கொள்ளுதலே பொருத்த முடையதாகும்.
 

ஒட்டக்கூத்தர்


    தமிழ்ப்புலவர்தம் பெயர்களும் அருமையாக ஊர்ப் பெயர்களிலே
காணப்படுகின்றன. சோழ மன்னர் அவைக்களத்திற் கவிச் சக்கரவர்த்திப்
பட்டம் பெற்று விளங்கிய கவிஞருள் ஒருவர் ஒட்டக் கூத்தர். அவர் மலரி
என்ற சிற்றூரிலே பிறந்தவர். முன்று சோழ மன்னர்கள் அவரை
ஆதரித்தார்கள். அன்னாருள் ஒருவன் தன்னை அவர் மாணவன் எனப்பேசி
பெருமை கொண்டான். பேரளத்துக்கு அருகேயுள்ள ஒரு சிற்றூர்
அக்கவிஞருக்குப் புலமைக் காணியாக அளிக்கப்பட்டது. அதன் பெயராகிய
கூத்தனூர் என்பது, ஒட்டக்கூத்தர் பெயரால் வந்ததென்று தெரிகின்றது.132
கலைமகள் அருளால் சீரும் சிறப்பும் பெற்ற ஒட்டக்கூத்தரது மரபில்
தோன்றிய வரதக் கூத்தன் அங்கு அத் தெய்வத்திற்கு ஓர் ஆலயம்
அமைத்துப் போற்றினான் என்பர்.
 

பொய்யா மொழியார்

    பதினாறாம் நூற்றாண்டில் விளங்கியவர் பொய்யா மொழிப் புலவர்.
அவர் தஞ்சாவூரையாண்ட சந்திரவாணன் மீது பாடிய கோவை
“தஞ்சைவாணன் கோவை” என்று வழங்குகின்றது. அவர் வாக்கு அருள்
வாக்கென்றும், பொய்யாமொழி யொன்றும்