காலத்தில் இருவகை வழக்கிலும் ஏற்றமுற்று விளங்கிய சோறு என்னும் சொல்
பிற்காலத்தில்
எளிமையுற்றது.5 சாதம் என்பது
அதனினும் சிறப்புடைய பதமாகக்
கொள்ளப்பட்டது. இதனால்
சோற்றுத்துறை
சாதத் துறையாயிற்று; சாதத் துறை சாத்துறையென மருவிற்று. எனவே, இன்று
திருச்சாத்துறை
என்று அது வழங்கப்படுகின்றது.
திருப்பெருந்துறை
அரிசிலாற்றங் கரையில், பாடல் பெற்ற பெருதுறை ஒன்று
அமைந்துள்ளது.
“தழையார் மாவின் தாழ்கனி யுந்தித்
தண் அரிசில் புடைசூழ்ந்து
குழையார் சோலை மென்னடை யன்னம்
கூடுபெருந் துறையாரே”
என்று அதன் இயற்கை யழகினை எடுத்துரைத்தார்
திருஞானசம்பந்தர்.
இன்னும், தஞ்சை நாட்டுக்
கும்பகோண வட்டத்தில் இப்பொழுது
திருப்பந்துறையென வழங்கும் பதி
திருப்பெருந்துறையேயாகும்.
ஆதியில்
செங்கற் கோயிலாயிருந்த
திருப்பெருந்துறை, கரிகாற்சோழன் காலத்தில் கற்
கோயிலாயிற்று என்று
சாசனம் தெரிவிக்கின்றது. இராஜராஜ சோழன்
வீரபாண்டியன் முதலிய
பெருமன்னர் காலத்துச் சாசனம் அக் கோயிலிற்
காணப்படுதல் அதன்
பழமைக்கு ஒரு
சான்றாகும்.6 |