இன்னும், சிவபெருமான் கோயில் கொண்டருளும் வாயிற் பதிகளைக் குறித்து,
“மடுவார்தென் மதுரைநகர் ஆல வாயில்
மறிகடல்சூழ் புனல்வாயில் மாடநீடு
குடவாயில் குணவாயில் ஆன எல்லாம்
புகுவாரைக் கொடுவினைகள் கூடா வன்றே”
என்று கூறியருளினார் திருநாவுக்கரசர்.
திருஆலவாயில்
பாண்டி நாட்டுத் தலைநகராகிய மதுரையில் அமைந்த ஆலயம் ஆல
வாயில் என்று தேவாரத்திற்
குறிக்கப் படுகின்றது.
“ஞாலம் நின்புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே”
என்று திருஞான சம்பந்தர் அதனைப் போற்றி யருளினார். இவ் வண்ணமே
வாயிற் பதிகளை யெல்லாம்
தொகுத்துரைத்த
திருநாவுக்கரசரும், ‘மதுரை
நகர் ஆலவாயில்’
ஈசனார் மருவும் இடங்களில் ஒன்றாகக்
குறித்துப்
போந்தார். ஆலவாயில் என்பது ஆலவாய் எனவும் வழங்கிற்று. ஆலவாயிற்
கோயிற்
கொண்ட ஆண்டவனை ஆலவாயான் என்றார் திருஞான சம்பந்தர்.
இக் கருத்துக்களை ஆராயும் பொழுது மதுரை யம்பதியில் அலகிலாத்
திருவிளையாடல் புரிந்தருளிய
ஈசன் ஆலந்தருவில் அமர்ந்திருந்தான்
என்பது நன்கு விளங்குவதாகும்.
புனவாயில்
பாம்பாறு கடலிற் பாயும் இடத்திற்கு அருகே திருப்புன வாயில் என்ற
தலம் அமர்ந்திருக்கின்றது.
அவ்வூரின் தன்மையை, |