குன்று என்றும், குன்றிலும் குறைந்தது பாறை என்றும், அறை என்றும், கல்
என்றும் பெயர் பெறும்.10
குன்று
குன்றின் பெயர் கொண்ட ஊர்கள் தமிழ்நாட்டிற் சில உண்டு. பாண்டி
நாட்டுத்
திருப்பரங்குன்றமும்,11தொண்டை நாட்டுத் திருக்கழுக்குன்றமும்
பாடல் பெற்ற மலைப் பதிகளாகும்.
ஆர்க்காட்டு நாட்டில்
குன்றம் என்பது
குணம் என மருவி வழங்கும். நெற்குன்றம்,
நெடுங்குன்றம், பூங்குன்றம்
என்னும்
பெயர்கள் முறையே நெற்குணம்,
நெடுங்குணம், பூங்குணம் என
மருவி உள்ளன.12
குன்றை அடுத்துள்ள ஊர் குன்றூர் என்றும், குன்றத்தூர் என்றும்,
குன்றக்குடி என்றும் பெயர் பெறும்.
அப்பெயர்களிலுள்ள குன்றம்
பெரும்பாலும் குன்னம் என மருவி வழங்கும்.13 நீலகிரி என்னும்
மலையில்
இப்பொழுது குன்னூர் என வழங்குவது குன்றூரேயாகும். இன்னும்,
தொண்டை நாட்டுக் குன்றத்தூரும்,
பாண்டி நாட்டுக் குன்றக்குடியும்
இப்போது முறையே குன்னத்தூர் என்றும், குன்னக்குடி என்றும்
குறிக்கப்படுகின்றன.
பாறை
பாறை என்னும் பதம் பல ஊர்ப் பெயர்களிலே காணப்படும், பூம்பாறை,
சிப்பிப்பாறை, தட்டைப்பாறை,
குட்டைப்பாறை முதலிய பெயருடைய
ஊர்கள்
தமிழ் நாட்டில் உள்ளன. |