பக்கம் எண் :

106


 

சென்னையில் காந்திஜி
 

அன்பே வடிவான காந்திமகான்
    ஆர்வமாய் நாட்டினைச் சுற்றுகையில்,
சென்ற இடமெல்லாம் மக்களுமே
    ‘ஜே, ஜே’ எனவர வேற்றனராம்.

சென்னையில் காந்திஜி தங்கினராம்,
    சேலத்து ராஜாஜி வீட்டினிலே.
அன்று கனவிலே தோன்றியதாம்,
    ஹர்த்தால் நடத்திடும் யோசனையே.