பக்கம் எண் :

26

அன்னை எதுவுமே உண்ணவில்லை-என்றால்
     அருமை மகன்காந்தி வாடிடுவார்.
என்னதான் அப்போது செய்திடுவார்?-அதை
     எடுத்துநான் கூறுவேன்; கேட்டிடுவாய்.

வாசலி லேவந்து நின்றிடுவார்-அவர்
     வானத்தை அண்ணாந்து பார்த்திடுவார்.
ஆசை யுடன்அவர் காத்திருந்தும்-மேலே
     ஆதவன் எளிதில் வருவதில்லை.

சூரியன் ஒருவேளை தெரிந்ததெனில்-உடன்
     துள்ளிக் குதித்துள்ளே ஓடிடுவார்.
ஆருயிர் அன்னையைக் கையுடனே-அவர்
     அழைத்துக் கொண்டேஓடி வந்திடுவார்.