 | அன்னை எதுவுமே உண்ணவில்லை-என்றால் அருமை மகன்காந்தி வாடிடுவார். என்னதான் அப்போது செய்திடுவார்?-அதை எடுத்துநான் கூறுவேன்; கேட்டிடுவாய். வாசலி லேவந்து நின்றிடுவார்-அவர் வானத்தை அண்ணாந்து பார்த்திடுவார். ஆசை யுடன்அவர் காத்திருந்தும்-மேலே ஆதவன் எளிதில் வருவதில்லை. சூரியன் ஒருவேளை தெரிந்ததெனில்-உடன் துள்ளிக் குதித்துள்ளே ஓடிடுவார். ஆருயிர் அன்னையைக் கையுடனே-அவர் அழைத்துக் கொண்டேஓடி வந்திடுவார். | | |
|
|