பக்கம் எண் :

47

நண்பன் இதனைக் கண்டு மிகவும்
     மகிழ்ச்சி கொண்டனன்;
‘நமது முயற்சி வென்ற’ தென்றே
     துள்ளிக் குதித்தனன்.
கண்ணை மூடி காந்தி இரவில்
     தூங்கும் வேளையில்,
கனவு கண்டு மிகவும் நெஞ்சு
     கலங்க லாயினர்.

வயிற்றுக் குள்ளே ஆடு வந்து
     நிற்க லானது;
வாயை விட்டு ‘மேமே’ என்று
     கதற லானது.
உயிரைக் கொன்றே ஊனைத் தின்னல்
     தப்புத் தப்பென
உணர்ந்தார்; அதனை எண்ணி எண்ணி
     உருக லாயினர்.