பக்கம் எண் :

64

நண்பரின் கோபம்

சத்தி யத்தைக் காக்க வேண்டிச்
     சைவ உணவே காந்தியும்
நித்தம் உண்டு வந்தார். அதனால்
     நேர்ந்த துன்பம் அதிகமாம்.

லண்டன் நகரில் வெள்ளைக் கார
     நண்பர் ஒருவர் இருந்தனர்.
அன்பு கொண்டு காந்தி யோடு
     அவரும் பழகி வந்தனர்.