38 | பெரியோர் வாழ்விலே | பாடலை அவரே அந்த விழாவில் பாடினார். அதைக் கேட்டு வந்திருந்தோரெல்லாம் மகிழ்ச்சி அடைந்தனர்.
அப்போது பாரதியார் பாடிய அந்தப் பாடலின் கடைசி நான்கு வரிகளை இப்போது அதே மாநிலக் கல்லூரித் தோட்டத்தில் கல்லிலே பொறித்து வைத்திருக்கிறார்கள். ஆம் ; திருவல்லிக்கேணிக் கடற்கரைப் பக்கம் சென்றால், அங்குள்ள மாநிலக் கல்லூரியின் முன்னே நிற்கும் சாமிநாதய்யர் சிலைக்குக் கீழே பாருங்கள்.
பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயில் துதியறிவாய் ; அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய் ; இறப்பின்றித் துலங்கு வாயே.
என்ற வரிகளைக் காண்பீர்கள் ! |  |
|
|
|
|