பக்கம் எண் :

38

பெரியோர் வாழ்விலே


பாடலை அவரே அந்த விழாவில் பாடினார். அதைக் கேட்டு வந்திருந்தோரெல்லாம்
மகிழ்ச்சி அடைந்தனர்.

     அப்போது பாரதியார் பாடிய அந்தப் பாடலின் கடைசி நான்கு வரிகளை இப்போது
அதே மாநிலக் கல்லூரித் தோட்டத்தில் கல்லிலே பொறித்து வைத்திருக்கிறார்கள். ஆம் ; 
திருவல்லிக்கேணிக் கடற்கரைப் பக்கம் சென்றால், அங்குள்ள மாநிலக் கல்லூரியின்
முன்னே நிற்கும் சாமிநாதய்யர் சிலைக்குக் கீழே பாருங்கள்.

     பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும்
          காலமெலாம் புலவோர் வாயில்
     துதியறிவாய் ;  அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய் ; 
          இறப்பின்றித் துலங்கு வாயே.

என்ற   வரிகளைக் காண்பீர்கள் !