| 40 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
ஆனைமலைக்கு வடக்கில் இருந்தது பூழி நாடாகும். உம்பற்காடானது அப்போது இவனது ஆட்சியின்கீழ் இருந்திருக்க வேண்டும். பூழி நாட்டில் ஆண்ட இவன் உம்பற் காட்டின்மீது படையெடுத்துச் சென்று, வென்று தன் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்தான்.6 அகப்பாக் கோட்டையை அழித்தல் பாகுடி என்பது ஊரின் பெயர்.7 இந்த ஊர், பெருமலைகளுக்கு இடையே இருந்ததால் 8 அகப்பாக்குடி எனப்பட்டு, ‘அகப்பா’ என மருவியும் வழங்கப்பட்டது. உம்பற்காட்டைத் தன் ஆட்சியின்கீழ்க் கொண்டு வந்த பல்யானைக் குட்டுவன் அகப்பாக்கோட்டையைத் தாக்கி வென்று தீக்கிரையாக்கினான்.9 இக் கோட்டையைக் கைப்பற் வேண்டும் என்பதே அவன் நோக்கம்.10 அகப்பாக் கோட்டை மிக வலிமையானது. உயர்ந்த மதிற்சுவர்; அதில் வரிசை வரிசையாகப் பதுங்குமிடங்கள்; மதிற்சுவரை அடுத்து ஆழமான அகழி; அகழியைச் சுற்றிக் காவற்காடு. கோட்டைக்குள்ளே நுழைய உயர்ந்த நிலைவாயில்; வாயிற் கதவைச் சாத்தித் தாழிடுவதற்காக வில்விசை முறைப்படி மாட்டித் தொங்கும்படி அமைக்கப்பட்ட கணையமரம்; வாயிலுக்கு முன அகழியைக் கடக்கும் மரப்பாலம்; பாலத்திற்கு வெளியே போரிடுவதற்காக அமைக்கப்பட்ட வெட்டவெளி; வாயிலிலும் காவற்காட்டிலும் இருந்துகொண்டு கோட்டையைக் காக்கும் நாற்படைகள். இத்தனை பாதுகாவலையும் கொண்டது அகப்பாக் கோட்டை11 ஆகும். அகப்பாக் கோட்டையைச் சூழ்ந்திருந்த மலை தலைமலை ஆகும்.12 இப் பகுதியில் முதியர் என்னும் மக்கள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் பாண்டியரின் ஆட்சியை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தனர்.13
6. பதிற். பதி. 3 : 2 7. பதிற். 21 : 26 - இது மயிலை சீனி. வேங்கடசாமியின் கருத்து 8. ௸ 22 : 26 ‘அண்ணலம் பெருங்கோட் டகப்பா வெறிந்த’ 9. ௸ பதி, 3 : 3 10. பதிற். 22 : 27 ‘உழிஞைசூடி’ 11. ௸ 22 : 26 12. பதிற். 22 : 26 ‘அண்ணலம் பெருங்கோடு’ - கோபி வட்டம் 13. ௸ பதி. 3 : 4 ‘மதியுறழ் மரபின் முதியர்’ |