பக்கம் எண் :

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் 51

  வந்தன பிறவு மாற்றி வளமலி
மாளிகை யெடுக்கவு மணிக்குலை கமுகு
நாளி கேரமு நன்குட னாக்கவுங்
40 கரும்புஞ் செந்நெலு மொருங்குட னடவுஞ்
சண்பகந் தமனகஞ் சாதி கேதகை
வண்கழு நீருடன் மலர்பல வியற்றவும்
. . . . ஞ் செக்கு மமைக்கவு மருளிச்
சாலையுந் தவமுந் தருமமுந் தழைப்பச்
45 செம்பிலுங் கல்லிலுஞ் செய்து தன்புக
ழலர்கதி ரளவுஞ் செல்ல
மலர்தலை யுலகின் வாழ்வமைத் தனனே.

குறிப்பு :- வரி 5. செயங்கொண்ட சோழ மண்டலம் - தொண்டை மண்டலம். வரி 13. சினவரசன் - ஜினன், அருகன். வரி 15. சினாலயம் - அருகன் கோவில்.

ஆலத்தூர் திவாகரன்

இடம் : வடஆர்க்காடு மாவட்டம், குடியாத்தம் தாலுகா, திருவல்லம். இவ்வூர் பில்வநாதேசுவரர் கோவிலின் மகாமண்டபத்துத் தென்புறச் சுவரில் உள்ள செய்யுள் சாசனம்.

பதிப்பு : எண் 325. தென் இந்திய சாசனங்கள், தொகுதி நான்கு. (No. 325. S.I.I. Vol. IV.)

விளக்கம் : வல்லத்துப் பில்வநாதேசுவரர் கோவில், முற்காலத்தில் திருவல்லத்து ஆழ்வார் கோயில் என்று பெயர் பெற்றிருந்தது. இக்கோவில் பூசைக்காக ஆலத்தூர் திவாகரன் என்பவர் தானம் செய்ததை இச்செய்யுள் கூறுகிறது.

சாசனச் செய்யுள்

ஆலத்தூ ராளி திவாகரன்தான் செய்வித்தான்
பாலொத்த வெள்ளி நாற்பதின் கழஞ்சால் - சோலைத்
திருவலத்தே யாழ்வார் திருப்பல்லிக்குச் செல்வம்
வருநலத்தான் கொள்கைதான் மற்று.

திருவுண்ணாழிகையார் வசம்.