பக்கம் எண் :

மறைந்துபோன தமிழ் நூல்கள்187

எனவும்,

‘அறம்பொரு ளின்ப மரசர் சாதி’     2

எனவும்,

‘அறம்பொருள் வாணிகர் சாதியென் றறைப’     3

எனவும்,

“அறமேற் சூத்திர ரங்க மாகும்’     4

எனவும் சொன்னார் செயிற்றியனார்.”

(சிலம்பு., அரங்கேற்று காதை. 13ஆம் அடி,
அடியார்க்கு நல்லார் உரை மேற்கோள்)

அக்கோ லேழகன் றெட்டு நீண்டு
மொப்பா லுயர்வு மொருகோ லாகு
நற்கோல் வேந்த னயங்குறு வாயின்
முக்கோ றானு முயரவு முரித்தே’     5

என்றார் செயிற்றியனார்.”

(சிலம்பு., அரங்கேற்று காதை. 101ஆம் அடி,
அடியார்க்கு நல்லார் உரை மேற்கோள்)

“‘பிணியுங் கோளு நீங்கிய நாளா
லணியுங் கவினு மாசற வியற்றித்
தீதுதீர் மரபிற் றீர்த்த நீரான்
மாசது தீர மண்ணுநீ ராட்டித்
தொடலையு மாலையும் படலையுஞ் சூட்டிப்
பிண்டமுண்ணும் பெருங்களிற்றுத் தடக்கைமிசைக்
கொண்டு சென்றுறீஇக் கொடியெடுத் தார்த்து
முரசு முருடு முன்முன் முழங்க
வரசு முதலான வைம்பெருங் குழுவுந்
தேர்வலஞ் செய்து கவிகைக் கொடுப்ப
வூர்வலஞ் செய்து புகுந்த பின்றைத்
தலைக்கோல் கோட றக்க தென்ப’

என்றார் செயிற்றியனார்.” இந்தச் சூத்திரத்தை அரும் பொருள் உரை யாசிரியரும் மேற்கோள் காட்டுகிறார்.

(சிலம்பு, அரங்கேற்று காதை, தலைக்கோலமைதி,