பக்கம் எண் :

190மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15

(அழுகைச் சுவை)

“கவலை கூர்ந்த கருணையது பெயரே
யவலமென்ப வறிந்தோ ரதுதா
னிலைமை யிழந்து நீங்குதுணை யுடைமை
தலைமை சான்ற தன்னிலை யழிதல்
சிறையணி துயரமொடு செய்கையற் றிருத்தல்
குறைபடு பொருளொடு குறைபா டெய்தல்
சாப மெய்தல் சார்பிழைத்துக் கலங்கல்
காவ லின்றிக் கலக்கமொடு திரிதல்
கடகந் தொட்டகை கயிற்றொடு கோடல்
முடியுடைச் சென்னிபிற ரடியுறப் பணித
லுளைப்பரி பெருங்க றூர்ந்த சேவடி
தளைத்திளைத் தொலிப்பத் தளர்ந்தவை
நிறங்கிள ரகல நீறொடு சேர்த்தல்
மறங்கிளர் கயவர் மனந்தவப் புடைத்தல்
கொலைக்களங் கோட்டங் கோன்முனைக் கவற்சி
யலைக்கண் மாறா வழுகுர லரவ
மின்னோ ரன்னவை யியற்பட நாடித்
துன்னின ருணர்க துணிவறிந் தோரே.”     9

“இதன்பய மிவ்வழி நோக்கி
யசைந்தன ராகி யழுத லென்ப.”     10

(தொல்., பொருள்., மெய்ப்பாடு, 5ஆம் சூத்திரம்,
இளம்பூரண அடிகள் உரை மேற்கோள்)

(உவகைச் சுவை)

“ஒத்த காமத் தொருத்தனு மொருத்தியு
மொத்த காமத் தொருவனொடு பலரு
மாடலும் பாடலுங் கள்ளுங் களியு
மூடலு முணர்தலுங் கூடலு மிடைந்து
புதுப்புனல் பொய்கை பூம்புன லென்றிவை
விருப்புறு மனத்தொடு விழைந்து நுகர்தலும்
பயமலை மகிழ்தலும் பனிக்கட லாடலும்
நயனுடை மரபி னன்னகர்ப் பொலிதலுங்
குளம்பரிந் தாடலுங் கோலஞ் செய்தலுங்