பக்கம் எண் :

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு125

கோயமுத்தூர் பத்திரிகை: கோயமுத்தூர்.

சந்திய வர்த்தமானி: பசுமலை.

குடந்தை மித்திரன்: கும்பகோணம்.

சுதரிசனி: கோயமுத்தூர்.

சுதேசாபிமானி: சேலம்.

சுதேசநாடியம்: யாழ்ப்பாணம். க. வேலுப்பிள்ளை இதன் ஆசிரியர்.

சைவ சூக்குமார்த்தபோதினி: யாழ்ப்பாணம் திங்கள் இதழ். வேலணை கந்தப்பிள்ளை இதன் ஆசிரியர்.

சேலம் பானு: சேலம்.

சைவாபிமானி: யாழ்ப்பாணம், ஆசிரியர் வல்வை வைத்திய லிங்கம்.

ஞானப்பிரகாசம்: யாழ்ப்பாணம். ஆசிரியர் ஆ. சண்முகரத்தின சர்மா.

ஞானசிந்தி: யாழ்ப்பாணம். ஆசிரியர், வதிரி தமோதரம் பிள்ளை.

தமிழ்ச்செல்வன்: திருச்சிராப்பள்ளி.

தக்ஷிணதீபம்: சேலம்.

திவாகரன்: திருச்செங்கோடு. ஸ்ரீ இரணியகர்ப்ப இரகுநாத பாஸ்கர சேதுபதியவர்கள் பொருளுதவியால் நடந்தது.

தூதன்: கோயமுத்தூர்.

தென் இந்திய மித்திரன்: திண்டுக்கல்.

தேசாபிமானி: கூடலூர்.

நீலலோசனி: நாகைப்பட்டினம். ஸ்ரீ இரணியகர்ப்ப இரகுநாத பாஸ்கர சேதுபதி யவர்கள் பொருள் உதவிபெற்று நடந்தது.

நேசன்: திருச்சிராப்பள்ளி.

பிரமஞான போதினி: பெங்களுர்.

லோக வர்த்தமானி: சேலம்.

வித்தகம்: யாழ்ப்பாணம், தென்கோவை பண்டிதர் ச. கந்தையா பிள்ளை இதன் ஆசிரியர்.

விவேக திவாகரன்: யாழ்ப்பாணம்.

ஜனமித்திரன்: தஞ்சாவூர்.

ஜனப்பத்திரிகை: நாகைப்பட்டினம்.

ஸ்தலபூஷணி: ஸ்ரீரங்கம்.