112 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 |
| | எய்யா தென்றும் எதிர்த்திடும் பிணக்கில் நடுக்கடல் நன்னீர் சுவைத்திடு மொருகால்; மரக்கலம் வந்திடும் வயற்கரை யொருகால்; | | 110 | வாய்த்தலை விம்மிய மதகுபாய் வெள்ளம் ஓமென வோஇறந் தொலிக்கப் பிரணவ நாதமே தொனிக்குமந் நாட்டிடை யொருசார்; நறுமலர்க் குவளையும் நானிறத் திரணமும் படர்தரும் பழனக் கம்பளம் பரப்பித் | | 115 | தாமரைத் தூமுகை தூமமில் விளக்கா, நிலவொளி முத்துங் கவடியும் பணமா, அலவன் பலவிர லாலாய்ந் தெண்ண துகிர்க்கா லன்னமும் புகர்க்கால் கொக்குஞ் செங்கட் போத்துங் கம்புட் கோழியுங் | | 120 | கனைகுரல் நாரையுஞ் சினமிகு காடையும் பொய்யாப் புள்ளும் உள்ளான் குருகும் என்றிவை பலவும் எண்ணில குழீஇச் சிரஞ்சிறி தசைத்துஞ் சிறகை யடித்தும், அந்தியங் காடியின் சந்தங் காட்டித் | | 125 | தந்தங் குழூஉக்குரல் தமைவிரித் தெழுப்பும் பேரொலி யொன்றுமே யார்தரு மொருசார்; வீறுடை யெருத்தினம் வரிவரி நிறுத்தி |
எய்யாது - களைப்படையாமல், ஓ இறந்து - ஓசை பெருகி. பிரணவ நாதம் - ஓங்கார ஒலி. இரணம் - உப்பு. ஈண்டு உப்பளத்தை உணர்த் திற்று. பழனம் - வயல். தூமுகை - தூய்மையான மொட்டு. தூமம்இல் - புகை இல்லாத. கவடி - பலகறை, சோழி. அலவன் - நண்டு. பல விரல் - (பலகால்களாகிய) விரல்களால். துகிர்க்கால் அன்னம் - பவழம் போன்ற செந்நிறமான கால்களை யுடைய அன்னப் பறவை. புகர் - சாம்பல் நிறம். போத்து - செம்போத்து. இது நாரை இனத்தைச் சேர்ந்தது. கம்புட்கோழி - சம்பங்கோழி. புள் - பறவை. உள்ளான் குருகு - உள்ளான் குருவி. இது நீர்நிலைகளில் வாழ்வது. குழீஇ - குழுமி. அந்தியங்காடி - மாலைச் சந்தை. வீறு - ஆற்றல். |