பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் | 167 |
இரண்டாம் களம் இடம் : ஊர்ப்புறம் ஒருசார். காலம் : எற்பாடு. நடன்: நடராஜன். (நேரிசை ஆசிரியப்பா) நடராஜன்: (தனிமொழி) | | காலையிற் கடிநகர் கடந்து நமது வேலை முடிக்குதும். வேண்டின் விரைவாய் இன்றிரா முடிக்கினும் முடியும். துன்றராக் கவ்விய முழுமதிக் காட்சியிற் செவ்விதாம் | | 5 | பின்னிய கூந்தல் பேதையின் இளமுகம் என்னுளத் திருந்திங் கியற்றுவ திப்பணி. அதனால் அன்றோ இதுபோல் விரைவில் இவ்வினை இவ்வயின் இனிதின் முடிந்தது? எவ்வினை யோர்க்கும் இம்மையிற் றம்மை |
கடிநகர் - காவல் உடைய நகரம். வேலை - சுரங்கம் அமைக்கும் வேலை. துன்று - நெருங்கிய. அரா - பாம்பு. அராக்கவ்விய முழுமதி - கேது என்னும் பாம்பினால் விழுங்கப்பட்ட முழு நிலா. கேது என்னும் பாம்பு சந்திரனை விழுங்குவதால் சந்திரக் கிரகணம் ஏற்படுகிறது என்பது புராணக் கதை. (இதைப் புராணக் கதை விளக்கத்திற் காண்க.) அராக்கவ்விய...இளமுகம் - வாணியின் முகம் முழுநிலா போன்றும், பின்னி விடப்பட்ட அவளுடைய கூந்தல் சந்திரனை விழுங்கும் பாம்பு போன்றும் இருக்கின்றன என்பது கருத்து. இப்பணி - சுரங்கம் அமைக்கும் வேலை. வினை - தொழில். இவ்வயின் - இவ்விடத்தில். |