பக்கம் எண் :

290மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

  வாராய் குடில! மந்திரி உனக்கு
நேர்தான் ஆரே! நிகழ்ந்தவை அறிவைகொல்?
 220சுந்தர முனிவரோர் சுருங்கைதொட் டுளராம்;
நந்தமை அழைத்தனர் ஒளித்திட அவ்வழி;
மறுத்திட, மனோன்மணி யேனுமங் கனுப்பென
ஒறுத்தவர் வேண்டினர்; உரியநம்; குலமுனி
ஆதலின் ஆமென இசைந்தோம்; அவ்வழி
 225யாதென வினாயதற் கோதா தேகினர்;
பாதிரா வருவராம். பகர்ந்தவிக் கற்படை
மெய்யோ பொய்யோ? மெய்யினில் எவ்வயின்
உளதென உணர்தியோ? ஒழுங்குகொல், நமது
இளவர சியையங் கனுப்புதல்?
குடி:  இறைவ!
  230முன்னர்நாம் ஒருநாள் இந்நகர் காண
அழைத்தோம்! அந்நாள் யாதோ பூசை
இழைத்திட வோரறை இரந்தனர்.
ஜீவ:  ஆம்! ஆம்!
குடி: அவ்வறை எவ்வறை?
ஜீவ: அதுயான் அறிவேன்.
செவ்வே வடக்குத் தேம்பொழிற் கிப்புறம்.
 235மறுமுறி மணவறை,
குடி: (தனதுள்)
   அறிவிது வெகுநலம்;
  (ஜீவகனை நோக்கி)
  உறுவதங் கென்னென உணர்ந்தனை?
ஜீவ:  உணர்ந்திலேன்.


ஒறுத்து - வருத்தி. செவ்வே வடக்கு - நேர் வடக்கு. மறு முறி - அடுத்த அறை. (முறி - அறை. இது மலையாள நாட்டு வழக்குச் சொல்.)

235 - 243. அரசன் பேச்சைக் கொண்டே சுரங்கம் இருக்கும் இடத்தைக் குடிலன் யூகித்தறிந்துகொண்டு, அதைத்தான் முன்னமே அறிந்தவன் போலப் பேசுவதை இவ்வடிகள் உணர்த்துகின்றன.