290 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 |
| | வாராய் குடில! மந்திரி உனக்கு நேர்தான் ஆரே! நிகழ்ந்தவை அறிவைகொல்? | | 220 | சுந்தர முனிவரோர் சுருங்கைதொட் டுளராம்; நந்தமை அழைத்தனர் ஒளித்திட அவ்வழி; மறுத்திட, மனோன்மணி யேனுமங் கனுப்பென ஒறுத்தவர் வேண்டினர்; உரியநம்; குலமுனி ஆதலின் ஆமென இசைந்தோம்; அவ்வழி | | 225 | யாதென வினாயதற் கோதா தேகினர்; பாதிரா வருவராம். பகர்ந்தவிக் கற்படை மெய்யோ பொய்யோ? மெய்யினில் எவ்வயின் உளதென உணர்தியோ? ஒழுங்குகொல், நமது இளவர சியையங் கனுப்புதல்? | குடி: | | இறைவ! | | 230 | முன்னர்நாம் ஒருநாள் இந்நகர் காண அழைத்தோம்! அந்நாள் யாதோ பூசை இழைத்திட வோரறை இரந்தனர். | ஜீவ: | | ஆம்! ஆம்! | குடி: | | அவ்வறை எவ்வறை? | ஜீவ: | | அதுயான் அறிவேன். செவ்வே வடக்குத் தேம்பொழிற் கிப்புறம். | | 235 | மறுமுறி மணவறை, | குடி: | | (தனதுள்) | | | அறிவிது வெகுநலம்; | | | (ஜீவகனை நோக்கி) | | | உறுவதங் கென்னென உணர்ந்தனை? | ஜீவ: | | உணர்ந்திலேன். |
ஒறுத்து - வருத்தி. செவ்வே வடக்கு - நேர் வடக்கு. மறு முறி - அடுத்த அறை. (முறி - அறை. இது மலையாள நாட்டு வழக்குச் சொல்.) 235 - 243. அரசன் பேச்சைக் கொண்டே சுரங்கம் இருக்கும் இடத்தைக் குடிலன் யூகித்தறிந்துகொண்டு, அதைத்தான் முன்னமே அறிந்தவன் போலப் பேசுவதை இவ்வடிகள் உணர்த்துகின்றன. |