| | அறியா வெறியன். அன்பொ டிம்மாலை |
| 115 | குறியா நீவிடு தூதையும் கொண்டிலன். அண்டிய சீவ ராசிகள் அனைத்தையும் மண்டமர் இதில்நின் வைவாள் தனக்கே இரையிடல் ஒன்றே விரதமாக் கொண்டனன். பித்தன் ஒருவன் தன்னால் இத்தமிழ் |
| 120 | நாடெலாம் வெறுஞ்சுடு காடாய் விடுமே. ஆவ! இப்பெரும் பாவமும் பழியும் அஞ்சினேன்; அஞ்சினேன்! எஞ்சலில் கருணை யுருவே! அடியேற் கொருமொழி தருவையேல் ஒருவர்க் கேனு முறுதுய ரின்றி |
| 125 | அரசனும் புரிசையும் அரைநொடிப் போதிலுன் கரதல மாமொரு கௌசலம், காட்டுகே னடியேன் கேட்டரு ளரசே! |
| | (நிலைமண்டில ஆசிரியப்பா) |
புரு | | (தனதுள்) பாதகா! விசுவாச காதகா! |
| | ஆ! ஹா! (சிரித்து) |
குடி: | | அரசன் கைப்படி லாங்குளார் யாருமென் |
| 130 | உரைதவ றாதுன் குடைக்கீ ழொதுங்குவர். மங்கல மதுரையு மிங்கிவர் வழியே உன்னா ணைக்கீ ழொ துங்குதல் திண்ணம். தொல்புவி தோற்றியது தொட்டர சுரிமை மல்கிய புவியிஃ ததனால், “மன்னவன்” |
| 135 | என்றபே ரொன்றுநீ யீவையே லென்றும், நின்னா ணையின்கீழ் நின்றுநீ முன்னர் வேண்டிய தாரொடு நீருமே யன்றிமற் றீண்டுள எவையே யாயினும் வேண்டிடில், |
குறியா - குறியாக. ஆவ - ஐயோ, இரக்கச்சொல். கரதலமாம் - கையில் ஆகும். கௌசலம் - சாமர்த்தியம். விசுவாச காதகன் - செய்ந்நன்றியைக் கொன்றவன். திண்ணம் - உறுதி.