பக்கம் எண் :

44மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

மனோன்மணீயம்

பாயிரம்

கடவுள் வணக்கம்

(நேரிசை வெண்பா)

வேத சிகையும் விரிகலையும் மெய்யன்பர்
போதமும் போய்த்தீண்டாப் பூரணமே-பேதமற
வந்தெனை நீ கூடுங்கால் வாழ்த்துவர்யார் வாராக்கால்
சிந்தனையான் செய்ம்முறையென் செப்பு.

தமிழ்த்தெய்வ வணக்கம்

(பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா)

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கொழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்,
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமும்அதிற்சிறந்த திரவிடநல் திருநாடும்;
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே.      1

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையரு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமும்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.      2

- இவையிரண்டும் ஆறடித்தரவு

கடல்குடித்த குடமுனியுன் கரைகாணக் குருநாடில்
தொடுகடலை யுனக்குவமை சொல்லுவதும் புகழாமே.     1

ஒருபிழைக்கா அரனார்முன் உரையிழந்து விழிப்பாரேல்
அரியதுன திலக்கணமென் றறைவதுமற் புதமாமே.     2