சொல்
|
அருஞ்சொற்பொருள் |
நன்கனம் | நன்றாக . |
நன்காடு | சுடுகாடு ; இடுகாடு . |
நன்கு | அழகு ; மிகுதி ; நல்லது ; நலம் ; நிலைபேறு ; நன்னிமித்தம் ; மகிழ்ச்சி ; மிகவும் ; இதம் . |
நன்குமதித்தல் | சிறப்பித்தல் . |
நன்கொடை | பரிசில் ; உதவிப்பொருள் ; தருமம் . |
நன்செய் | நெல்லும் கரும்பும் விளையும் வயல் . |
நன்சொல் | இன்சொல் ; நற்போதனை . |
நன்பகல் | உச்சிக்காலம் . |
நன்பகலந்தி | உச்சிக்காலம் . |
நன்பால் | நல்லொழுக்கம் . |
நன்பு | நன்மை ; செவ்வையாய் . |
நன்பொருள் | மெய்ப்பொருள் ; மகன் . |
நன்மக்கள் | நல்ல பிள்ளைகள் ; சான்றோர் . |
நன்மார்க்கம் | நன்னெறி , நல்வழி . |
நன்முகம் | அழகிய முகம் ; இன்முகம் ; தாராளம் . |
நன்முத்து | சிப்பியிலிருந்து எடுக்கும் முத்து . |
நன்மை | நலம் ; பயன் ; உதவி ; சிறப்பு ; நன்னெறி ; நற்குணம் ; ஆக்கம் ; நற்செயல் ; நல்வினை ; வாழ்த்துமொழி ; மிகுதி ; மேம்பாடு ; புதுமை ; அழகு ; நல்லருள் ; காண்க : நன்மையாதல் . |
நன்மைப்பகுதி | நல்வினைப்பயன் . |
நன்மைப்பேறு | நல்வினைப்பயன் . |
நன்மையாதல் | பூப்படைதல் . |
நன்மொழி | இன்மொழி ; உறுதிமொழி ; தேவபாணி . |
நன்மொழிபுணர்த்தல் | நூலழகு பத்தனுள் இனிய மொழிகளைச் சேர்த்து வழங்குகை . |
நன்றாக | செம்மையாக ; ஒரு வாழ்த்துத் தொடர் . |
நன்றாய் | தாராளமாய் ; காண்க : நன்றாக . |
நன்றாயிருத்தல் | நல்ல நிலைமையிலிருத்தல் ; நல்வாழ்வோடிருத்தல் . |
நன்றி | நன்மை ; உதவி ; செய்ந்நன்றி ; அறம் . |
நன்றிகெட்டவன் | செய்ந்நன்றியை மறந்தவன் . |
நன்றிகேடு | செய்ந்நன்றி மறக்கை . |
நன்றிகொல்லுதல் | செய்ந்நன்றி மறக்கை . |
நன்றிகோறல் | செய்ந்நன்றி மறக்கை . |
நன்றிசொல்லுதல் | செய்ந்நன்றியறிவித்தல் . |
நன்றிமறத்தல் | செய்ந்நன்றி மறந்துவிடுதல் . |
நன்றியற்றவன் | செய்ந்நன்றி மறந்தவன் . |
நன்றியறிதல் | செய்ந்நன்றியுணர்தல் . |
நன்றியில்செல்வம் | பயன்படாச் செல்வம் . |
நன்றியீனம் | காண்க : நன்றிகேடு . |
நன்று | நல்லது ; சிறப்பு ; பெரிது ; அறம் ; இன்பம் ; நல்வினை ; உதவி ; வாழ்வின் நோக்கம் ; துறக்கம் ; ஏற்கைக்குறிப்பு . |
நன்னடத்தை | நல்லொழுக்கம் . |
நன்னடை | நல்லொழுக்கம் . |
நன்னயம் | இன்சொற் செயல்கள் ; நல்ல உதவிகள் ; உபசாரம் ; நன்மை ; நினைவு . |
நன்னர் | நன்மை . |
நன்னாட்கொள்ளுதல் | மங்கலமான நாளைக் குறிப்பிடுதல் . |
நன்னாரி | கொடிவகை . |
நன்னாள் | நல்ல நாள் ; விழாநாள் . |
நன்னி | சிறியது . |
நன்னிக்கல் | மருந்தரைக்கும் அம்மி . |
நன்னிலம் | நன்செய் . |
நன்னிலமிதித்தல் | மணமகனான அரசன் தன் மனைவியைவிட்டு முதன்முதல் அத்தாணி மண்டபத்திற்கு அடிவைக்கும் சடங்கு . |
நன்னிலை | நல்ல நிலைமை ; நல்லொழுக்க்ம் ; தவம் ; உலகம் . |
நன்னிறம் | வெண்ணிறம் . |
நன்னீர் | தூயநீர் ; பனிநீர் ; நல்ல இயற்கை . |
நன்னுதல் | பல்லாற் கடித்தல் ; நறுக்குதல் . |
நன்னெறி | நல்ல வழி ; ஒரு நீதிநூல் . |
நனந்தலை | அகன்ற இடம் ; மண்டலம் ; நடு ; உச்சந்தலை ; உச்சி ; திசை . |
நனம் | அகற்சி ; அகலம் . |
நனவு | மெய்ம்மை ; விழிப்பு ; நினைவு ; களன் ; போர்க்களம் ; தேற்றம் ; அகலம் . |
நனா | நனவுநிலையான விழிப்பு . |
நனி | மிகுதியாய் . |
நனை | பூவரும்பு ; தேன் ; கள் ; யானைமதம் . |
நனைத்தல் | ஈரமாக்குதல் . |
நனைதல் | ஈரமாதல் ; அரும்புதல் ; தோன்றுதல் . |
நனைவு | ஈரம் . |
![]() |
![]() |