சொல்
|
அருஞ்சொற்பொருள் |
ஆகிருதி | உருவம் ; உடல் ; அடிதோறும் ஒற்று நீங்கிய இருபத்திரண்டு உயிரெழுத்துக் கொண்டதும் நான்கு அடியை உடையதுமாய் வரும் சந்தம் . |
ஆகிருநந்தனம் | காண்க : ஆகிரந்தம் . |
ஆகிருநனந்தம் | காண்க : ஆகிரந்தம் . |
ஆகிலியர் | ஆகாதொழிக . |
ஆகிவருதல் | நன்றாகக் கூடிவருதல் . |
ஆகின்று | ஆகாநின்றது , அமைந்தது ; ஆயிற்று . |
ஆகு | கவரி ; கொப்பூழ் ; எலி ; பெருச்சாளி ; பன்றி ; கள்ளன் ; சாமரம் . |
ஆகுகன் | பெருச்சாளி ஊர்தியனாகிய விநாயகன் . |
ஆகுஞ்சனம் | சுருக்குகை . |
ஆகுதல் | ஆதல் . |
ஆகுதி | அக்கினியில் மந்திர பூர்வமாகச் செய்யும் ஓமம் ; பலி ; ஒருவகைப் பறை . |
ஆவுதி | அக்கினியில் மந்திர பூர்வமாகச் செய்யும் ஓமம் ; பலி ; ஒருவகைப் பறை . |
ஆகுபுக்கு | பூனை . |
ஆகுபெயர் | ஒன்றன் பெயராயிருந்தும் அதனோடு தொடர்புடைய மற்றொன்றற்குத் தொன்றுதொட்டு ஆகிவரும் பெயர் . |
ஆகுயர்த்தோன் | பெருச்சாளி உருப்பொறித்த கொடியுடையவனான கணபதி . |
ஆகுரதன் | காண்க : ஆகுகன் . |
ஆகுலச்சொல் | ஆரவாரப்பேச்சு . |
ஆகுலம் | மனக்கலக்கம் ; ஆரவாரம் . |
ஆகுலி | காண்க : சிற்றரத்தை ; ஆவிரைவகை . |
ஆகுலித்தல் | துன்புறுதல் . |
ஆகுவாகனன் | காண்க : ஆகுகன் . |
ஆகுளி | ஒருவகைச் சிறுபறை . |
ஆகுனி | வாதநோய்வகை . |
ஆகூழ் | நல்வினை ; ஆக்கத்திற்குக் காரணமான வினை ; முன்னேற்றத்திற்குக் காரணமான வினை . |
ஆகேடகம் | வேட்டை . |
ஆகேடம் | வேட்டை . |
ஆகேருகம் | தண்ணீர்விட்டான் கொடி . |
ஆகேவகமுள்ளி | காட்டுமுள்ளி . |
ஆகேறு | காண்க : சரக்கொன்றை . |
ஆகை | ஆதல் ; உயருதல் ; நிகழுகை . |
ஆகைச்சுட்டி | ஆகையால் . |
ஆகையர் | முடிவு ; கூட்டிவந்த மொத்தத் தொகை . |
ஆகையால் | ஆதலால் . |
ஆகோசனம் | கோரோசனை . |
ஆகோள் | போரில் பகைவரின் பசுக்களைக் கவர்ந்துகொள்ளுகை . |
ஆங்க | அங்ஙனே எனப் பொருள்படும் உரையசை ; வினையுவம வாய்பாடுகளுள் ஒன்று . |
ஆங்கண் | அவ்விடத்து . |
ஆங்கனம் | அவ்விதம் . |
ஆங்காங்கு | அங்கங்கு . |
ஆங்காரம் | பற்று ; காண்க : அகங்காரம் ; செருக்கு ; கரித்திரள் . |
ஆங்காரி | அகங்காரம் உள்ளவன்(ள்) . |
ஆங்காரித்தல் | காண்க : அகங்கரித்தல் . |
ஆங்காலம் | நற்காலம் . |
ஆங்கிலம் | ஆங்கிலமொழி . |
ஆங்கீரச | அறுபதாண்டுக் கணக்கில் ஆறாம் ஆண்டு . |
ஆங்கு | அவ்விடம் ; அக்காலத்தில் ; அப்படி ; ஓர் உவம உருபு ; ஏழன் உருபு ; ஓர் அசைநிலை . |
ஆங்குதல் | போதியதாதல் . |
ஆங்ஙனம் | காண்க : அங்ஙனம் . |
ஆச்சமரம் | சங்கஞ்செடி . |
ஆச்சமாதிகம் | மலைவெற்றிலை . |
ஆச்சரியம் | வியப்பு . |
ஆச்சல் | பாய்ச்சல் ; வண்டிப் பாதையில் உண்டாகும் பள்ளம் . |
ஆச்சன் | காண்க : அச்சன் . |
ஆகாமியம் | அதிக்கிரமம் ; மூவகைக் கன்மங்களுள் ஒன்று ; இப்பிறப்பில் செய்யும் புண்ணிய பாவங்கள் . |
ஆகாயக்கக்கரி | கக்கரிவகை . |
ஆகாயகங்கை | மந்தாகினி . |
ஆகாயகணம் | செய்யுள் கணத்துள் ஒன்று ; கருவிளங்காய்ச் சீராய் அமைவது . |
ஆகாயகமனம் | அறுபத்துநாலு கலையுள் வானத்தில் நடந்துசெல்லும் வித்தை . |
ஆகாயச்சக்கரம் | சித்திரகவிவகை . |
ஆகாயச்சொல் | எதிரில் இல்லாதான் ஒருவனை முன்னிலைப்படுத்திக் கூறும் பேச்சு . |
ஆகாயசாரிகள் | வானத்தில் திரிவோர் , சாரணர் . |
ஆகாயசூலை | குதிரை நோய்வகை . |
ஆகாயத்தாமரை | பூண்டுவகை ; குளிர்தாமரை ; இல்பொருள் ; கொட்டைப்பாசி . |
ஆகாயப்பிரவேசம் | காண்க : ஆகாயகமனம் . |
ஆகாயப்பூ | காண்க : ஆகாயத்தாமரை . |
ஆகாயப்பூரிதம் | பேய்முசுட்டை . |
ஆகாயமாஞ்சி | காண்க : சிறுசடாமாஞ்சில் . |
ஆகாயவாசிகள் | பதினெண் கணத்துள் ஒரு சாரார் . |
ஆகாரசமிதை | வேள்வி செய்வதற்குக் குறித்துள்ள இடத்தின் தென்கிழக்கிலும் வடகிழக்கிலும் வைக்கப்படும் சுள்ளி . |
ஆகாரசன்னை | நால்வகை முரசுகளுள் ஒன்று . |
ஆகாரம் | உருவம் ; உடம்பு ; ' ஆ ' என்னும் எழுத்து ; உணவு ; நெய் ; குறிப்பு . |
ஆகாரி | உயிர் ; பூனை . |
ஆகிய | பண்புருபு . |
ஆகிரந்தம் | புன்கமரம் . |
ஆகிரிநாட்டை | பண்வகை ; காண்க : ஆகரி . |
![]() |
![]() |
![]() |