சொல்
|
அருஞ்சொற்பொருள் |
பெருங்களன்செய்தல் | தெய்வ வழிபாட்டுக்குரிய இடமாகத் தயார்செய்தல் . |
பெருங்காஞ்சி | ஒவ்வொருவரையும் கூற்றம் அணுகுமென்று சான்றோர் கூறுதலைப்பற்றிச் சொல்லும் புறத்துறைவகை ; வீரர் படை முகத்துத் தம் ஆற்றல் தோற்றுவித்தலைக் கூறும் புறத்துறைவகை . |
பெருங்காடு | பெரிய வனம் ; சுடுகாடு . |
பெருங்காப்பியம் | நூல் இயல்புகள் எல்லாவற்றையும் குறைவறக்கொண்ட தொடர்நிலைச் செய்யுள்வகை . |
பெருங்காயம் | ஒரு மருந்துவகை ; கறிப்பெருங்காயம் ; ஒரு மரவகை ; ஒரு மரப்பிசின்வகை ; காண்க : பெருஞ்சீரகம் . |
பெருங்கால் | பெரிய வாய்க்கால் ; யானைக்கால் ; புயல்காற்று . |
பெருங்காற்று | புயல்காற்று . |
பெருங்கிராமம் | ஐந்நூறு குடிகளுடைய ஊர் . |
பெருங்கிழங்கு | காண்க : பெருமருந்து . |
பெருங்கிழமை | முழு உரிமை ; மிகுநேயம் . |
பெருங்குடல் | குடற்பிரிவு . |
பெருங்குடி | உயர்குடி ; வணிகருள் ஒரு பிரிவினர் ; நிலக்கிழார் . |
பெருங்குடியர் | காண்க : பெருங்குடிவாணிகர் . |
பெருங்குடியாட்டம் | நாட்டாண்மை . |
பெருங்குடிவாணிகர் | வணிகருள் ஒரு பிரிவினர் . |
பெருங்குமிழ் | ஒரு மரவகை . |
பெருங்குயம் | குயவர்க்கு அரசரளிக்கும் பட்டப்பெயர் . |
பெருங்குருகு | யானையுண்குருகு ; தலைச்சங்கத்து வழங்கிய ஓர் இசைத்தமிழ் நூல் . |
பெருங்குழி | பெரிய பள்ளம் ; கடல் ; சதுர அளவை ; முக்கால் ஏக்கர்கொண்ட நில அளவு . |
பெருங்குழுவைந்து | காண்க : ஐம்பெருங்குழு . |
பெருங்குறட்டை | காண்க : பெருமருந்து ; காக்கணங்கொவ்வை ; உறக்கத்தில் விடும் உரத்த மூச்சினொலி . |
பெருங்குறடு | விறகு முதலியன பிளப்பதற்காக அடியில் வைக்குந் தாங்குகட்டை . |
பெருங்குறி | ஊர்ப்பேரவை . |
பெருங்குறிச்சபை | ஊர்ப்பேரவை . |
பெருங்குறிஞ்சி | கொடிவகை ; பூண்டுவகை ; குறிஞ்சிப்பாடீடு . |
பெருங்கை | காண்க : பெரியகை ; யானை . |
பெருங்கொடை | எல்லோருக்கும் ஏராளமாகக் கொடுக்கை . |
பெருங்கோடணை | ஒரு முரசுவகை . |
பெருங்கோநங்கை | பட்டத்தரசி . |
பெருங்கோப்பெண்டு | பட்டத்தரசி . |
பெருச்சாளி | எலிவகை . |
பெருஞ்சவளம் | குந்தாயுதவகை . |
பெருஞ்சாந்தி | கோயிற் பெரிய திருவிழா முடிவில் நடக்கும் நீர்முழுக்கு . |
பெருஞ்சாய் | பேராற்றல் . |
பெருஞ்சிறப்பு | பெரிய மரியாதை ; உயர்ந்த கொண்டாட்டச் சூழல் . |
பெருஞ்சீரகம் | ஒரு செடிவகை . |
பெருஞ்சுட்டு | பெரும்புகழ் . |
பெருஞ்செய் | மேம்பாடுள்ள செயல் . |
பெருஞ்செய்யாளன் | பெரிய வீரச் செயலுள்ளவன் . |
பெருஞ்சொல் | பலரறிசொல் . |
பெருஞ்சோற்றுநிலை | போர் மேற்கொண்ட அரசன் படையாளர்க்கு உண்டியளித்து முகமன் செய்தலைக் கூறும் புறத்துறை . |
பெருஞ்சோற்றுவஞ்சி | போர் மேற்கொண்ட அரசன் படையாளர்க்கு உண்டியளித்து முகமன் செய்தலைக் கூறும் புறத்துறை . |
பெருஞ்சோறு | அரசன் படைத்தலைவர்களுக்கு அளிக்கும் பேருணவு ; பரணிநாள் . |
பெருத்தல் | அதிகப்படல் ; பருமையாதல் ; மிகுதல் . |
பெருந்தகவு | பெருமை ; பெருந்தன்மை . |
பெருந்தகளி | பல முகங்களை உடைய விளக்கு . |
பெருந்தகை | மிக்க பெருமையுடையவர் ; காண்க : பெருந்தன்மை ; மிக்க அழகு . |
பெருந்தன்மை | மேம்பாடு ; அகந்தை . |
பெருந்தனம் | கணிகையருள் ஒரு பிரிவினர் ; சோழரது அரசாங்க உத்தியோகங்களில் ஒன்று . |
பெருந்தாதை | காண்க : பெரியப்பன் . |
பெருந்தாய் | காண்க : பெரிய தாய் . |
பெருந்தானம் | நெஞ்சு , மிடறு , நாக்கு , மூக்கு , அண்ணம் , உதடு , பல் , தலை ஆகிய ஒலி எழும் எட்டு உறுப்புகள் . |
பெருந்திசை | வடக்கு முதலிய முதன்மைத் திசை ; நீண்ட நிலப்பரப்புள்ள திக்கு . |
பெருந்திணை | பொருந்தாக் காமம் , மனம் ஒவ்வாத காதல் . |
பெருந்திருவமிர்து | கடவுட்குப் படைக்கும் பெரிய நிவேதனம் . |
பெருந்திருவி | பெருஞ்செல்வமுள்ளவள் . |
பெருந்தில்லை | ஒரு மரவகை . |
பெருந்துத்தி | துத்திச்செடிவகை . |
பெருந்துருத்தி | நீர்வீசுங் கருவிவகை . |
பெருந்துறை | பெரிய துறைமுகம் ; திருப்பெருந்துறை என்னும் ஊர் . |
பெருந்தூறு | பெரும்புதர் . |
பெருந்தெரு | நகரின் தலைமை வீதி . |
பெருந்தேவபாணி | இசைப்பாவகையுள் ஒன்று ; ஓர் இலக்கியம் . |
பெருந்தேவி | காண்க : பெருங்கோப்பெண்டு . |
பெருந்தேன் | தேனீக்கள் கூட்டுகின்ற தேன் ; பெரிய தேனீவகை . |
பெருநகரத்தார் | வணிகர் . |
பெருநகை | பெருஞ்சிரிப்பு ; பேரிகழ்ச்சி . |
பெருநடை | உயர்ந்த நடை ; விரைந்த செலவு ; புறக்கூத்துக்குரிய ஆடல்களுள் ஒன்று ; உயர்ந்த ஒழுக்கம் . |
பெருநம்பி | இளவரசருக்குரிய பட்டப்பெயர் ; மந்திரியின் பட்டம் . |
பெருநயப்புரைத்தல் | பெருவிருப்பைக் கூறுதல் . |
பெருநறளை | நீண்ட கொடிவகை . |
பெருநறுவிலி | ஒரு மரவகை . |
பெருநாரை | நாரைவகை ; தலைச்சங்கத்து வழங்கிய இசைநூலுள் ஒன்று . |
பெருநாள் | திருநாள் ; இரேவதிநாள் ; முகமதியப் பண்டிகை ; நெடுங்காலம் . |
பெருநாளிருக்கை | அரசனது சிறப்பு நாளோலக்கம் . |
![]() |
![]() |
![]() |