சொல்
|
அருஞ்சொற்பொருள் |
நா | ஓர் உயிர்மெய்யெழுத்து(ந்+ஆ) ; சொல் ; நடு ; மணி முதலியவற்றின் நாக்கு ; தீயின் சுடர் ; திறவுகோலின் நாக்கு ; நாகசுரத்தின் ஊதுவாய் ; துலைநாக்கு ; அயல் ; பொலிவு . |
நாக்கரளை | நாவில் வரும் ஒரு நோய்வகை . |
நாக்களாம்பூச்சி | காண்க : நாக்குப்பூச்சி . |
நாக்கறுத்தான்புல் | தருப்பை . |
நாக்கு | நாக்கு என்னும் உறுப்பு ; சொல் ; நடு ; துலைநா ; மணியின் நாக்கு ; தீயின் சுடர் ; பூட்டின் தாள் ; திறவுகோலின் நாக்கு ; நாகசுரத்தின் ஊதுவாய் ; அயல் ; தானியக்கதிர் ; படகு வலிக்கும் தண்டு . |
நாக்குத்தவறுதல் | சொல்தவறுதல் ; பொய்சொல்லுதல் . |
நாக்குநரம்பற்றவன் | தீயவை பேசுபவன் ; அளவு கடந்து பேசுபவன் . |
நாக்குநீட்டுதல் | அளவுகடந்து பேசுதல் . |
நாக்குநீளுதல் | விருப்பமிகுதல் ; கடுமையாய்ப் பேசுதல் . |
நாக்குப்புண் | நாவில் தோன்றும் நோய்வகை . |
நாக்குப்புரட்டு | பொய் . |
நாக்குப்புரளுதல் | சொல் தவறுதல் . |
நாக்குப்புற்று | நாவில் உண்டாகும் புண்வகை . |
நாக்குப்பூச்சி | மலப்பையில் வாழும் சிறு புழு ; வயிற்றில் உள்ள நீண்ட புழுவகை ; நாங்கூழ் . |
நாக்குவழித்தல் | நாவின் அழுக்கினை வழித்து நீக்குதல் . |
நாக்குவளைத்தல் | பழித்தல் . |
நாக்குவாங்குதல் | நாக்கை உள்ளிழுத்தல் ; களைத்துப்போதல் ; வில்லங்கப்படுத்துதல் ; களைக்கப்பண்ணுதல் . |
நாக்குவிழுதல் | பேச நாவெழாதிருத்தல் . |
நாக்குழறுதல் | நாத்தழுதழுத்தல் . |
நாக்குறுதி | சொல் தவறாமை . |
நாக்கைப்பிடுங்கிக்கொள்ளுதல் | தவறு நடந்ததற்கு மிக்க வருத்தங்காட்டுதல் ; நாவைப்பிடுங்கிக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளுதல் ; முயற்சியெடுத்துக்கொள்ளுதல் ; அதிகமாகப் பேசுதல் . |
நாக்கொட்டுதல் | நாவறளுகை . |
நாகக்குவடு | செம்புமலை . |
நாககர்ணம் | செவ்வாமணக்கஞ்செடி . |
நாககற்பம் | செவ்வீயம் . |
நாககன்னிகை | நாகலோகத்துப் பெண் . |
நாக்கெந்தி | நேர்வாளம் ; காண்க : வஞ்சிக்கொடி . |
நாகசம் | சிந்தூரம் ; ஈயம் . |
நாகசரம் | காண்க : நாகசுரம் . |
நாகசாபம் | நல்லபாம்பைக் கொல்வதனால் ஏற்படும் பழிவினை . |
நாகசுரம் | துளைக்கருவிவகை . |
நாகசேதகன் | மலைகளின் சிறகை அரிந்தோனாகிய இந்திரன் . |
நாகணம் | நறும்பண்டவகை ; நேர்வாளம் . |
நாகணவாய் | பூவைப் பறவை . |
நாகணவாய்ச்சி | பூவைப் பறவை . |
நாகணவாய்ப்புள் | பூவைப் பறவை . |
நாகணை | திருமாலின் பாம்புப் படுக்கை . |
நாகணையினான் | பாம்பபைப் படுக்கையாகக்கொண்ட திருமால் . |
நாகத்திசை | வடமேற்கு . |
நாகதந்தம் | யானைக்கொம்பு ; பாம்பின் பல் ; முளையாணி . |
நாகதாளி | காண்க : சப்பாத்துக்கள்ளி . |
நாகதிசை | மேற்கு . |
நாகதீபம் | ஐந்தலை நாகத்தின் வடிவம்போன்ற விளக்கு . |
நாகதேவன் | காண்க : ஆதிசேடன் . |
நாகதேனி | காண்க : பெருமருந்து |
நாகதொனி | மருதப் பண்களுள் ஒன்று . |
நாகந்தி | காண்க : நேர்வாளம் . |
நாகநாடு | துறக்கம் ; நாகர் என்னும் மனித சாதியார் வாழும் நாடு ; பவணலோகம் . |
நாகநாதன் | துறக்கத்துக்கு இறைவனான தேவேந்திரன் ; காண்க : ஆதிசேடன் ; சிவன் . |
நாகப்பகை | பாம்பிற்குப் பகையான கருடன் . |
நாகப்பச்சை | பச்சைக்கல்வகை . |
நாகப்பாம்பு | நல்லபாம்பு ; வயிற்றுப்பூச்சி . |
நாகப்பூ | ஒரு மரவகை . |
நாகப்பூச்சி | காண்க : நாக்குப்பூச்சி . |
நாகபடம் | நல்லபாம்பின் படம் ; பாம்புப்படத்தின் உருவம்கொண்ட ஒரு காதணிவகை ; படமெடுத்த நாகத்தின் உருக்கொண்ட தோளணிவகை . |
நாகபந்தம் | ஒரு சித்திரகவிவகை . |
நாகபந்து | அரசமரம் . |
நாகபாசம் | பாம்புருவான ஒரு படைக்கலம் . |
நாகம் | வானம் ; துறக்கம் ; மேகம் ஒலி ; காண்க : நல்லபாம்பு ; நாகப்பச்சை ; நாவல் ; பாம்பு நஞ்சு ; நாகலோகம் ; யானை ; குரங்கு ; கருங்குரங்கு ; காரீயம் ; துத்தநாகம் ; நற்சீலை ; மலை ; புன்னைமரம் ; ஞாழல் ; சுகம் . |
நாகம்மா | பாம்புத் தேவதை . |
நாகமணி | நாகத்தின் தலையில் இருப்பதாகக் கருதப்படும் இரத்தினம் . |
நாகமல்லி | கொடிவகை . |
நாகமாதா | துளசி . |
நாகமாபுரம் | மதுரை . |
நாகமுகன் | யானைமுகத்தவனான கணபதி . |
நாகர் | தேவர் ; மகளிர் தலையணிவகை ; பாதி மக்கள் வடிவுமாய் அமைந்த நாகலோகவாசிகள் ; ஒரு பழைய சாதியார் . |
நாகரகன் | சித்திரகாரன் ; கள்வன் . |
நாகரத்தினம் | காண்க : நாகமணி . |
நாகரம் | காண்க : தேவநாகரி ; வடமொழி எழுத்து ; சுக்கு ; தேன்றொடை . |
நாகரவண்டு | பொன்வண்டு ; நத்தைவகை ; சிறுகுழந்தை . |
நாகரன் | நகரத்தான் ; சிறந்தோன் ; கணவன் ; உடன்பிறந்தான் . |
நாகராகம் | பெரும் பண்களுள் ஒன்று . |
நாகராசன் | காண்க : ஆதிசேடன் . |
நாகரி | குருக்கத்திக்கொடி . |
நாகரிகம் | நகரவொழுக்கம் ; காண்க : தேவநாகரி ; செப்பம் ; கண்ணோட்டம் ; மரியாதை ; பிலுக்கு . |