சொல்
|
அருஞ்சொற்பொருள் |
யா | ஓர் உயிர்மெய்யெழுத்து (ய்+ஆ) ; யாவை ; ஓர் அசைச்சொல் ; ஒரு மரவகை ; அகலம் . |
யாக்கை | கட்டுகை ; உடம்பு . |
யாக்கைக்குற்றம் | கொட்டாவி , நெட்டை , குறுகுறுப்பு , கூன் கிடை , நட்டுவிழல் என்பனவாகிய மெய்க்குற்றம் ; யாக்கைக்குரிய பசி , நீர் வேட்கை முதலிய பதினெட்டு வகைக் குற்றங்கள் . |
யாக்கைக்குறுகுற்றம் | கொட்டாவி , நெட்டை , குறுகுறுப்பு , கூன் கிடை , நட்டுவிழல் என்பனவாகிய மெய்க்குற்றம் ; யாக்கைக்குரிய பசி , நீர் வேட்கை முதலிய பதினெட்டு வகைக் குற்றங்கள் . |
யாககுண்டம் | வேள்விக்குழி . |
யாகசாலை | வேள்விச்சாலை ; கோயிலுள் வேள்விசெய்யும் மண்டபம் . |
யாகத்திரவியம் | வேள்விப்பொருள் . |
யாகநிலை | வேள்விச்சாலை . |
யாகப்பிறையான் | தக்கனது வேள்வித்தீயில் தோன்றிய சந்திரன் . |
யாகபத்தினி | வேள்விசெய்பவன் மனைவி ; திரௌபதி . |
யாகபதி | வேள்விசெய்யும் தலைவன் ; இந்திரன் . |
யாகபன்னி | யாகபதியின் மனைவி . |
யாகபேரம் | கோயிலுள் வேள்விச்சாலைக்குரிய மூர்த்தி . |
யாகபோசனர் | வானோர் . |
யாகம் | வேள்வி ; பதினெண்வகை வேள்வி . |
யாகமண்டபம் | காண்க : யாகசாலை . |
யாகவிபாகம் | வேள்வியிற் கிடைக்கும் அவிர்ப்பாகம் . |
யாங்கண் | காண்க : யாண்டை . |
யாங்கணும் | எங்கும் . |
யாங்கர் | அரக்கர் . |
யாங்கனம் | எங்கு ; எப்படி ; எவ்வாறு ; எவ்விடம் . |
யாங்கு | எங்கு ; எப்படி ; எவ்வாறு ; எவ்விடம் . |
யாங்ஙனம் | எங்கு ; எப்படி ; எவ்வாறு ; எவ்விடம் . |
யாசகம் | இரப்பு ; மதயானை ; பட்டத்தியானை . |
யாசகன் | இரவலன் ; வேள்வி இயற்றுபவன் . |
யாசித்தல் | இரத்தல் . |
யாசிதம் | இரப்புத்தொழில் , வட்டி அல்லது வாடகையின்றித் திருப்பிக்கொடுப்பதாகப் பெற்ற பொருள் . |
யாடம் | காண்க : சிறுகாஞ்சொறி . |
யாடு | ஆடு . |
யாண்டு | எங்கு ; எப்பொழுது ; ஆண்டு . |
யாண்டும் | எப்போதும் ; எவ்விடத்தும் . |
யாண்டை | எவ்விடம் . |
யாணர் | புதிதுபடல் ; புதிய வருவாய் ; வளமை ; செல்வம் ; நன்மை ; முறைமை ; அழகு ; தச்சர் . |
யாணன் | அழகுள்ளவன் . |
யாணு | அழகு . |
யாத்தல் | செய்யுளமைத்தல் ; கட்டுதல் ; பிணித்தல் ; நீர் முதலியன அணைத்தல் ; விட்டு நீங்காதிருத்தல் ; சொல்லுதல் . |
யாத்தார் | உற்ற நண்பர் . |
யாத்திரிகர்விடுதி | பயணஞ்செய்வோர் தங்குமிடம் . |
யாத்திரிகன் | புண்ணிய இடங்கட்குப் பயணம் செய்வோன் . |
யாத்திரை | பயணம் ; படையெழுச்சி ; காலட்சேபம் ; வழக்கம் ; திருவிழா ; கூத்து . |
யாத்து | தைப்பு . |
யாதபதி | கடல் ; வருணன் . |
யாதம் | யானைத்தோட்டி ; காண்க : யாதவம் . |
யாதவம் | மாட்டுமந்தை . |
யாதவர் | யதுகுலத்தவர் ; இடையர் . |
யாதவன் | கண்ணபிரான் ; இடையன் . |
யாதவி | குந்தி ; உமை ; யதுகுலத்தவள் . |
யாதனம் | தெப்பம் ; மரக்கலம் ; வேதனை ; துயரம் . |
யாதனாசரீரம் | நரகம் நுகர்தற்குரிய உடம்பு . |
யாதனை | வேதனை ; நரகவேதனை ; துன்பம் . |
யாதிகன் | வழிச்செல்வோன் . |
யாது | எது ; இராக்கதன் ; பிசாசு ; கள் ; நினைவு . |
யாதுதானன் | இராக்கதன் . |
யாதும் | எதுவும் . |
யாப்பண்டம் | கருவுற்றவள் விரும்பும் தின்பண்டம் . |
யாப்பதிகாரம் | செய்யுளிலக்கணங் கூறும் நூற்பகுதி . |
யாப்பறை | கற்பில்லாதவள் . |
யாப்பியம் | பொழுதுபோக்கு ; காலவரையறையுள்ளது ; புல்லியது ; நோய்வகை . |
யாப்பு | கட்டுகை ; கட்டு ; செய்யுள் ; யாழ்ப்பத்தரிற் குறுக்கே வலிவுறச் செய்யுங் கட்டு ; சிறப்புப்பாயிர இலக்கணம் பதினொன்றனுள் இன்ன நூல் கேட்டபின் இன்னது கேட்கத் தக்கதென்னும் தொடர்பு ; அன்பு ; உறுதி ; சூழ்ச்சி ; பொருத்தம் ; பாம்பு . |
யாப்புறவு | தள்ளத்தகாத நியதி ; தகுதி . |
யாப்புறுத்தல் | வலியுறுத்தல் . |
யாப்புறுதல் | பொருள் நிரம்பியிருத்தல் ; ஏற்புடையதாதல் ; ஈட்டுதல் . |
யாபனம் | பொழுதுபோக்குதல் ; இகழுதல் ; தாமதிக்கை . |
யாபித்தல் | பொழுதுபோக்குதல் ; நுகர்தல் ; கவர்தல் . |
யாம் | தன்மைப் பன்மைப் பெயர் . |
யாமக்கோட்டம் | அந்தப்புரம் . |
யாமகோடம் | சேவல் ; நாழிகைவட்டில் . |
யாமங்கொள்பவர் | ஊர்காவலர் ; நாழிகைக் கணக்கர் . |
யாமசரிதன் | இரவில் திரிபவனான அரக்கன் . |
யாமபதி | சந்திரன் . |
யாமபேரி | இரவில் ஒவ்வொரு சாமத்தின் தொடக்கத்திலும் கொட்டும் பேரிகை . |
யாமம் | நள்ளிரவு ; சாமம் ; இரவு ; இடக்கை மேளம் ; மாலைப்பொழுதின் பின் பத்து நாழிகை ; அகலம் ; தெற்கு . |
யாமயாழ் | நள்ளிரவில் மீட்டும் யாழ் . |
யாமவதி | இரவு . |
யாமளபுராதனர் | காளியின் படைவீரர் . |