நம்பி பெருமாள் கோவில் - திருநறையூர்
மூலவர்

திருநறையூர் நம்பி, ஸ்ரீனிவாசன், வ்யூகவாசுதேவன், சுகந்தவனநாதன்
என்னும் திருநாமங்கள்.

தாயார்

வஞ்சுளவல்லி, நம்பிக்கை நாச்சியார், திருமணக் கோலத்திலேயே
நின்று அருளுகிறார்.

உற்சவர்

மூலவருக்குரைத்த அதே பெயர்களே

தீர்த்தம்

இங்கு முக்கியமான 5 தீர்த்தங்களுண்டு

விமானம்

ஸ்ரீனிவாச விமானம், ஹேம விமானம்.

விருட்சம்

வில்வ விருட்சம், வகுளம் எனப்படும் மகிழ மரம்.

மணிமுத்தா புஷ்கரணி

சோழன் தெய்வ வாள் பெற்றது.

ஸங்கர்ஷன தீர்த்தம்

பிரம்மாவின் தோஷம் விலகியது.

பிரத்யுமன தீர்த்தம்

பானுதத்தன் என்னும் அரக்கனின் சாபந் தீர்ந்தது.

அனிருத்தன் தீர்த்தம்

இந்திரனின் சாபமகன்றது

ஸாம்ப தீர்த்தம்

சப்தரிஷிகள் தவம் செய்த பெருமை பெற்றது.

காட்சி கண்டவர்கள்

மேதாவி முனிவரும் திருமணத்திற்கு வந்திருந்த பிரம்மாவும்.

முன் பின்