சிறப்புக்கள்
திருநாங்கூருக்கு வந்த 11 எம்பெருமான்களில் இவர் காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆவார்.
பெரிய திருவடி, சந்திரன், இவ்விருவருக்கு பெருமாள் இங்கே காட்சி கொடுத்ததாக ஐதீஹம்.
திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களால் மங்களாசாசனம்
காஞ்சி வரதராஜர் போலவே இப்பெருமாளும் வரந்தருவதில் சமர்த்தராகையால்,
“மூவரி லெங்கள் மூர்த்தி இவனென முனிவரோடு
தேவர் வந்திரைஞ்சும் நாங்கூர் திருமணிக் கூடத்தானே”
என்பது திருமங்கையாழ்வாரின் அமுத வாக்கு
தை அமாவாசை கருட சேவைக்கு இப்பெருமானும் எழுந்தருள்வார்.
|