தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சுந-விடை

    • தன் மதிப்பீடு : விடைகள் - II

      4. சுந்தர காண்டத்தின் பெயர்ப் பொருத்தத்தை விளக்குக.
       

      1)

      ஏனைய காண்டங்களின் கதையை விடச் சுந்தர காண்டத்தின் கதை சுவை (அழகு) மிக்கதாய் உள்ளது.

      2)

      அனுமனின் பெருமையை விளக்கும் அழகிய பாடல்களைக் கொண்டது.

      3)

      அனுமனுக்குச் சுந்தரன் என்ற பெயர் உண்டு. அனுமன் பற்றிய நிகழ்ச்சிகளையே பெரிதும் விவரிப்பதால் இக்காண்டம் சுந்தர காண்டம் என அவன் பெயராலேயே அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.

      4)

      இராமன், சீதை இருவருடைய அழகு இக்காண்டத்தில் இனிதாகக் கூறப்பட்டுள்ளது.

      5)

      இராமன் சீதை இருவரின் பிரிவு நிலையில் நுகரப் பெறும் துன்பச் சுவை இக்காண்டத்தில் கவிதை அழகுடன் பாடப்பட்டுள்ளது. இவ்வாறாகச் சுந்தர காண்டத்தின் பெயர்க் காரணங்கள் விளக்கப்பட்டுள்ளன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 26-07-2017 15:30:41(இந்திய நேரம்)