Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
3. இறந்து விட்ட ஒருவனைத் துஞ்சினான் என்று குறிப்பிடுவது எதைக் காட்டுகிறது?
எதையும் மங்கலமாகச் சொல்ல வேண்டும் என்ற மனநிலை தமிழருக்கு உண்டு. அது அவர்களது பண்பாட்டுக் கூறு. எனவே, இறந்துவிட்ட ஒருவனை அவ்வாறு சொல்லாமல், அவன் தூங்குகிறான் என்ற பொருளில் துஞ்சினான் என்று குறிப்பிடுகின்றனர். இது தமிழர்களின் உயர்ந்த மனநிலையையும் பண்பாட்டையும் புலப்படுத்துகிறது.
