Primary tabs
-
1.7 தொகுப்புரை
புராண நாடகங்கள், மக்களுக்கு நன்கு அறிமுகமான பழைய கதைகளைக் கொண்டு படைக்கப்பட்டவை. இருப்பினும் இந்நாடகங்களின் வாயிலாகச் சமயக் கருத்துகள் பரப்பப்பட்டன. குறிப்பாகப் படிப்பறிவற்ற மக்களுக்குச் சமய அறிவு ஊட்டும் சாதனங்களாகப் புராண நாடகங்கள் திகழ்ந்தன. கிராமங்களில் புனிதமான சமயச் சடங்காகவே நாடகங்கள் நடத்தப்படுகின்றன. இந்நாடகங்களின் மூலம் இசைப்பாடல்கள் மக்களிடையே பரவின. அரிய தத்துவ விளக்கங்கள் எளிதாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன.