Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
3)வீரத்தாயில் காணலாகும் பொதுவுடைமைக் கருத்துகளை எழுதுக.
மக்கள் அனைவரும் சமமானவர்கள். எல்லோருக்கும் எல்லாமே பொதுச் சொத்துக்கள் எனும் பொருளியல் கொள்கையில் தீவிர நம்பிக்கை கொண்டவர் பாரதிதாசன். இதனை வீரத்தாயில் வீரமகனான சுதர்மன் மூலம் வெளிப்படுத்திக் காட்டுகிறார்.
‘எல்லார்க்கும் தேசம்; எல்லார்க்கும் உடைமை எலாம்
எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே’என்று மணிபுரியை ஆளும் உரிமை இனி மன்னனுக்கில்லை, அனைத்து மக்களுக்கும் தான் என்று குடியரசுக்குட்படுத்தும் அரசியல் பிரகடனத்தைக் காண முடிகிறது.