Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
6)
சாதி வேறுபாட்டினைக் கவிஞர் எவ்வாறு கண்டிக்கிறார்?‘சாதிக் காடுகளை வெட்டிச் சாய்க்க வேண்டும்’ என்று சேரிப் பெண்கள் கும்மியில் தம் கண்டிப்பினை வெளிப்படுத்துகிறார்.
சாதியை வகுத்து நம்மைப்
பாழ்செய்த தடியர் கூட்டம்என்று சாடியுள்ளார்.
சாதிப்பெயர்களை ஒழிக்கவேண்டும்; ஆண்பெண் இணைந்தது மானுடம். சாதிப் பூட்டை உடைத்தெறிந்து விரும்பியவனையே துணைவனாக அடைய வழி வகுக்கிறார் கவிஞர்.
‘காதலுக்குத் தொலைதூரம் சாதிமதம்’ என்று கொடிமுல்லையில் பேசுவதன் மூலம் சாதிச்சனியனை ஒழிக்கும் நோக்கத்திலேயே தமது படைப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.