தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

(விடை)

3)
அற்புதத்திருவந்தாதியிலிருந்து உவமை நயத்துக்கு ஓர்
எடுத்துக் காட்டுத் தருக.
    இயற்கையை உடலாகக் கொண்டவன் சிவன். ஒரு
நாளின் பொழுதுகளையே உவமையாக்கி, சிவபெருமானை
வர்ணிக்கும் அழகைப் பாருங்கள்.

காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின்
தாங்குருவே போலும் சடைக்கற்றை மற்றவர்க்கு
வீங்கிருளே போலும் மிடறு
- (65)

    வேளைக்கு வேளை இயற்கை அடையும் நிறங்கள்
சிவபெருமான் திருமேனியில் திகழ்தலைச் சுட்டிக் காட்டுகிறார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 20:59:23(இந்திய நேரம்)