Primary tabs
2500 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த தொல்காப்பியர்,
தான் எழுதிய தொல்காப்பிய இலக்கண நூலினை மூன்று
அதிகாரங்களாகப் பகுத்தார் என்பதை அறிந்திருப்பீர்கள்.
எழுத்துகள் பிறந்தது முதல் அவை ஒன்றோடு ஒன்று இணைந்து
மொழியாகும் தன்மைகளைக் கூறுவது எழுத்ததிகாரம்.
இவ்வெழுத்துகள் சொல்லாகி, அச்சொற்கள் அமையும் பாகுபாடுகள்,
அவற்றின் பெயர் வகைகள் முதலியவற்றைக் கூறுவது
சொல்லதிகாரமாகும்.
இச்சொற்கள் இணைந்து பல்வேறு பொருள்களை உணர்த்தும். இது
பொருளதிகாரம் என்று அழைக்கப் பெறுகிறது. பொருள்
என்றவுடன் உடனே நாம் உணரும் செய்தி நம் உடைமைப்
பொருள்களைத்தான்.
ஆனால் தொல்காப்பியர் பொருள் என்பதற்கு நம் உடைமைப்
பொருளைக் குறிக்கவில்லை. அவர் வாழ்வியல் நிலைகளைக்
குறிக்கின்றார். வாழ்வியல் நிலைகளை முதற்பொருள், கருப்பொருள்,
உரிப்பொருள் என்று மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றார்.
வருகின்றன. இவ்வகத்திணை இயல் தொல்காப்பியப்
பொருளதிகாரத்தின் முதல் இயலாகும்.