Primary tabs
இப்பாடம் புறத்திணைப் பாகுபாட்டில் தொல்காப்பியர் கூறிய
திணைகளையும், துறைகளையும் அடிப்படையாகக்
கொண்டிருந்தாலும், பிற்காலப் புறப்பொருள் வெண்பா
மாலையின் திணை துறைகளையும் நாம் மேம்போக்காக
இப்பாடத்தில் அறிந்து கொண்டோம்.
கைக்கிளை, பெருந்திணை ஆகியவை அகத்திணைகளாக
இருந்தாலும் அன்பின் ஐந்திணை என்னும் வரையறைக்குள்
அடங்காததால் பிற்காலத்தில் புறத்திணையில் இணைக்கப்பட்டன.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II