Primary tabs
எட்டுத் தொகையில் காணப்படும் நூல்களுள் பதிற்றுப்பத்து
நான்காம் இடத்தைப் பெற்றுள்ளதை எட்டுத்தொகை பற்றிய
வெண்பா கூறும்.
இந்நூல்களில் பதிற்றுப்பத்து, புறநானூறு ஆகிய இரண்டும்
புறப்பொருள் பற்றியன. புறநானூறு சங்க கால வரலாற்றை அறிய
உதவுவது. பதிற்றுப்பத்து சங்க காலச் சேரமன்னர்களின் வரலாற்றை
மட்டும் அறிய உதவுகிறது. இசை வகுக்கப்பட்ட புறநூல் இது ஒன்று
மட்டுமே. இந்த இரண்டு புறப்பாடல்களைத் தவிர, அகநானூறு,
நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகியவை
அகப்பாடல்களாகும். பரிபாடல் அகமும் புறமும் கலந்தது.
பத்துப் பத்து என்பது பதிற்றுப்பத்து என ஆயிற்று. பத்துச்
சேர மன்னர்களைப் பற்றிப் பத்துப் புலவர்கள் பாடிய
பத்துப் பத்துப் பாடல்களின் தொகுதியாக விளங்குவதால் இந்நூல்
பதிற்றுப்பத்து எனப் பெயர் பெற்றது. ஆக இது நூறு பாடல்கள்
அடங்கிய தொகுதியாகும்.
பதிற்றுப்பத்து பத்து அரசர்களைப் பற்றிப் பத்துப்புலவர்கள்
பாடிய பாடல்களின் தொகுதி என்றாலும் கால வெள்ளத்தில்
முதற்பத்தும், இறுதிப் பத்தும் அழிந்துபட்டன. தமிழுலகிற்குக் கிடைத்திருப்பவை இரண்டாம் பத்து முதல் ஒன்பதாம் பத்து
முடியவுள்ள எட்டுப் பத்துக்களே. முதற்பத்தையும், பத்தாம்
பத்தினையும் சார்ந்த பாடல்கள் சில தொல்காப்பிய உரைகளாலும்,
புறத்திரட்டு என்னும் தொகை நூலாலும் தெரிய வருகின்றன.
பாடப்பெற்ற அரசன்
-
கண்ணனார்
இமயவரம்பன்
நெடுஞ்சேரலாதன
கௌதமனார்
பல்யானைச்
செல்கெழு குட்டுவன்
காப்பியனார்
களங்காய்க் கண்ணி
நார்முடிச் சேரல்
கடல்பிறக்கோட்டிய
செங்குட்டுவன்
நச்செள்ளையார்
சேரலாதன்
செல்வக் கடுங்கோ வாழியாதன்
தகடூர் எறிந்த பெருஞ்சேரல்
இரும்பொறை
கிழார்
குடக்கோ இளஞ்சேரல்
இரும்பொறை