Primary tabs
இந்தப் பாடம் சங்க இலக்கியத்தில் அமைந்துள்ள
குறிஞ்சித் திணைப் பாடல்களின் அறிமுகம் பற்றியது.
குறிஞ்சித் திணைப் பாடல்களின் முதற்பொருள்,
கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றை
இப்பாடம்
விவரிக்கிறது. குறிஞ்சி நில மக்களுக்கு உரிய
வாழ்க்கை
ஒழுக்கங்கள், பண்புகள் ஆகிய சிறப்புகளை இப்பாடம்
விளக்குகிறது. குறிஞ்சித் திணைப் பாடல்களின் கற்பனை நயம்,
சொல்லாட்சி, உவமை முதலியவற்றையும் இப்பாடம்
விளக்குகிறது.
இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள்
கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.
அமைந்து உள்ளது என்பதைச் சில சான்றுகள் மூலம்
உணரலாம்.
அறத்தொடு நிற்றல், வரைவு கடாஅதல், இற்செறிப்பு,
இரவுக்குறி ஆகியவற்றையும்; குறிகேட்டல்,
தினைப்புனம் காத்தல் ஆகியவற்றையும் அறியலாம்.
குறிஞ்சி நிலத்துக்கு உரிய குறிஞ்சி மலர் பற்றி அறியலாம்.
சொல்லாட்சி, உவமை நயங்கள் பற்றி அறியலாம்.