தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4.4- இல்லறத்தாரின் ஒழுக்கங்கள்

4.4 இல்லறத்தாரின் ஒழுக்கங்கள்


    மாணவர்களே! சமணத் துறவிகளின் 28 ஒழுக்கங்களைப்
பற்றி அறிந்து கொண்ட நீங்கள் இப்பொழுது சமண சமயத்தில்
இல்லற (குடும்ப) வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்களின் 10 ஒழுக்கங்கள்
பற்றித் தெரிந்து கொள்ளப் போகின்றீர்கள்.

பத்து ஒழுக்கங்களாவன:

1.
கொல்லாமை
-
உயிர்க் கொலை     செய்யாது
இருத்தல்.
2.
பொய்யாமை
-
பொய் பேசாது உண்மையே
பேசுதல்.
3.
கள்ளாமை
-
பிறர் பொருளைக் களவாடாமல்
(திருடாமல்) இருத்தல்.
4.
பிறன் மனை
விரும்பாமை
-
பிறரின் மனைவியை மனத்தால்
கூட நினைக்காமை.
5.
பொருள் வரைதல்
-
அளவாகப் பொருளைச் சேர்த்தல்.
6.
கள் உண்ணாமை
-
கள் (மது) உண்ணாமல் இருத்தல்.
7.
ஊன் உண்ணாமை
-
ஊன் (இறைச்சி) உண்ணாமல்
இருத்தல்.
8.
தேன் உண்ணாமை
-
தேன் உண்ணாமல் இருத்தல்.
9.
இரவு உண்ணாமை
-
இரவு நேரத்தில் உண்ணாமல் பகல்
பொழுதில் மட்டுமே உண்ணுதல்.
10.
பெரியோரை
வணங்குதல்
-
தீர்த்தங்கரர் உள்ளிட்ட பெரியோரை
வணங்குதல்.

    இப்பத்து ஒழுக்கங்களையும் சமண சமய இல்லறத்தார்
தவறாது பின்பற்றி நடக்க வேண்டும். அதுபோல் சமணத்
துறவிகள் மேலே கூறிய 28 ஒழுக்கங்களையும் தவறாது பின்பற்றி
நடக்க வேண்டும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:16:26(இந்திய நேரம்)