தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

2.
கட்டளைக் கலித்துறை யாப்பின் இலக்கணம் யாது?
அந்த யாப்பில் அமைந்த இரு நூல்களைக் குறிப்பிடுக.
     கட்டளைக் கலித்துறை என்பது, முதல் நான்கு
சீர்களிலும் வெண்டளை பிறழாமல், கடைசிச்சீர் அடிதோறும்
விளங்காயாக அமைய, நேரசையால் தொடங்குவது. அடிக்கு
16 எழுத்தும், நிரையசையில் தொடங்குவது 17 எழுத்தும் என
அமைவது (இவ்வாறு எண்ணுகையில் ஒற்றெழுத்தைத்
தவிர்க்க வேண்டும்). தஞ்சைவாணன் கோவை, அபிராமி
அந்தாதி
முதலிய நூல்கள் கட்டளைக் கலித்துறை யாப்பில்
அமைந்தவை.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:29:15(இந்திய நேரம்)