Primary tabs
இப் பெண்மணியின் வீரத்தனமே, பேசுதற்கு அரியது-சொல்லுதற்கு அருமையானது, என்றார் - என்று வியந்துகூறினர். (எ-று.)
காளையின் சொல்லைக் கேட்டமக்கள். இவர் ஆண்மையினும் இப்பெண்மணியின் ஆண்மையே சொல்லமுடியாததாயுளது என்றரென்க.
மேனி-உடலின் ஒளி; தேஜுஸம் காளை - இளம் பிராயமுள்ளவன். பண் - இசை, படி-பூமி முடிய-முழுவதும். ஆண்மை - மரணத்திற்கு அஞ்சாமையும் உயிர்க்கொலை செய்யவிருந்த மன்னனுக்கு அஞ்சாது அறமொழி புகன்றதும். ஏனும்-எனினும் என்பதன் மரூஉ. பெண்ணினுக்கு அரசி-பெண்தன்மையினுக்கு அரசிபோல்வாள். ‘பெண்ணுயிர்...திண்மையுடைவனவல்ல‘ என்று (யசோ. 47-.ல்) பெண்களின் இயல்பைக் கூறினாராதலின், பெண்களுக்கு ஆண்மை தோன்றுத லருமை பற்றி ஈண்டு, ‘பெண்ணினுக்கு அரசியாண்மை பேசுதற் கரிது‘ என வியந்தோதினார்.
ஆண்மை என்பது இருபாலருக்கும் வழங்கும். இதனை, ‘பிறப்பே குடிமைட ஆண்மை‘ என்ற (தொல். மெய்ப்-25.) சூத்திரத்தா லறியலாகும், இனி, ‘ஆண்மையாவது ஆளுந்தன்மை. அஃது,
(குறுந். 43.) என இருபாலையும் உணர்த்திற்று‘ என்னும் நச்சினார்க்கினியருரை ஈண்டு நோக்கத்தகும். (59)
மன்னனும் வியத்தல்