தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


வில்வ மரத் தோரம்
விரிச்ச தலைப் பூ மணக்கும்
கருத்தப் பொடி மணக்கும்
கருத்தச் சாமி போற வழி

ஓடையிலே ஒரணேறு
ஒருத்தி மகன் கருத்தாற
கருத்தாற வாய் திறந்தா
கனக மணி ஓசையிடும்

மஞ்சள் எடைக் கெடையாம்
மரிக் கொழுந்து ரெண்டெடையாம்
நானெ ணங்கும் சாமியிட்ட
நல் குணங்கள் நாலெடையாம்

அருணாக் கொடி அஞ்சி ரூவா
அதுக் கெசஞ்ச ஓடாணி
ஓடாணி மின்னலுல
ஒளி விடுதே உங்க தேகம்

மஞ்சனத்திப் பலகை போல
மார்படந்த என் சாமி
நெஞ்சில் படுத்துறங்க
நினைவு மெத்தத் தோணுதையா !

மலையிலே பிரம்பு வெட்டி
மலைக்குக் கீழே சிலம்படிச்சி
தெரு மறிச்சுச் சிலம்படிக்கும்
செல்லச் சாமி நம்மதுரை

கம்பத்துத் துண்டு களாம்
கலர் கொடுத்த நேரியலாம்
மலையாளத் துண்டுகளாம்
மறக்க மனம் கூடுதில்லை

மார்பிலே சந்தனமாம்
மணிக்கையிலே தங்கக் காப்பாம்
தங்கக் காப்பு போட்ட சாமி
தய விருந்தாப் போதுமையா



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:13:44(இந்திய நேரம்)