தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).


(ஆண்)

நெல்லுக் கருதறுத்து
நிமிர்ந்து நிற்கும் செவத்தபுள்ள-என்
சொல்ல மறந்திராத-நீ
சொன்னபடி நானிருப்பேன்

(பெண்)

தும்ப மலர் வேட்டி கட்டி
தூக்குப் போணி கையிலேந்தி
வாராக எங்க மாமன்
வட்டம் உதறுதற்கே

(வேறு)

நாலு மூலை வயலுக்குள்ளே
நாற்று நடும் குள்ளத்தாரா
குலுங்குதோடி குண்டஞ்சம்பா
உன்னரிவாள் என்னரிவாள்
உருக்கு வச்ச கருக்கரிவாள்
சாயப்பிடி அரிவாள்
சம்புதடி நெல்லம் பயிர்
வெள்ளிப்பிடி அரிவாள்
வீசுதடி நெல்லப் பயிர்
அறுப் பறுத்து திரித்திரிச்சு
அன்னம் போல நடை நடந்து
சின்னக் கட்டா கட்டச் சொல்லி
சிணுங்கினாளாம் பொன்னியம்மா
வீதியிலே கல் உரலாம்
வீசி வீசிக் குத்துராளாம்
கையைப் புடிக்காதீங்க
கைவளையல் நொறுக்கிவிடும்
கண்ணாடி வலைவிதொட்டு
கருதறுக்கப் போற பிள்ள
கண்ணாடி மின்னலுல
கருதறுப்பு பிந்துதடி
வெள்ளிப்பிடி யருவா
விடலைப்பிள்ளை கையருவா
சொல்லியடிச் சருவா
சுழட்டுதையா நெல்கருதை

வட்டார வழக்கு: கருது-கதிர்; நேத்து-நேற்று; மறந்திராதே-மறந்திடாதே; அருவா-அரிவாள்.

சேகரித்தவர்:

இடம்:

S.M.கார்க்கி

சிவகிரி,
நெல்லை மாவட்டம்.

S.S. போத்தையா

விளாத்திக்குளம்,
நெல்லை மாவட்டம்.

வாழப்பாடி சந்திரன்

வாழப்பாடி,
சேலம் மாவட்டம்.

சடையப்பன்

அரூர்,
தருமபுரி மாவட்டம்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:53:13(இந்திய நேரம்)