மருத மரம் இதற்கு ஆற்று மருது, நீர் மருது, வெண் மருது என்னும் பெயர்கள் உண்டு. தாவரவியல்
பெயர் : டெர்மினேலியா அர்ஜீனா (Terminalia
arjuna Roxb Wight & Arn.) வளரியல்பு :
30-60 மீ உயரம் வளரக்கூடிய மரமாகும். அடிமரத்தின் சுற்றளவு 7-10 மீ இருக்கும். மரப்பட்டை வெண்சாம்பல் நிறம் கொண்டிருக்கும். இலைக்காம்பு 2 செ.மீ நீளம் இருக்கும். பயன்கள் :
இதன் பட்டை குடல் புண்ணிற்குப் பயன்படுகிறது. மற்றும் பல் சொத்தைக்குப் பயன்படுகிறது. ஒற்றைத் தலைவலி, தசைப் பிடிப்பு, உடல் பருமன் போன்றவற்றிற்கும் இம்மரம் பயன்படுகிறது. மஞ்சள் காமாலை, காசநோய் போன்றவற்றிற்கும் இதன் மரம் பயன்படுகிறது. |