ஜம்பை கல்வெட்டு் அமைவிடம் : விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டத்தில் ஜம்பை உள்ளது. இக்கல்வெட்டு உள்ள இடத்திற்குத் தாசிமடம் என்று பெயர். இது 1981 ல் தொல்பொருள் ஆய்வுக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது. காலம்: பொ.ஆ.1 ஆம் நூற்றாண்டு ( தோராயமானது ) மொழி: தமிழ் எழுத்து: தமிழி (சங்க காலத்தமிழ் எழுத்து) கல்வெட்டுப் பாடம் ஸதிய புதோ அதியன் நெடுமான் அஞ்சி ஈத்த பாளி செய்தி ஸத்திய புத்திரன் அதியன் நெடுமான் அஞ்சி என்பவர் தானமாகக் கொடுத்தே பாளி (சமணர் படுக்கை) சிறப்புகள் •
தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சங்க காலச் சிற்றரசர் அதியமானின்
கல்வெட்டு. இக்கல்வெட்டு கண்டுபிடிக்கும் வரை இதிலுள்ள "ஸதிய புதோ " என்பதற்கு வாய் மொழி கோசர், சாதவாகனர் எனப் பல வம்சங்களை ஊகித்துள்ளனர். |