ஈமப்பேழை
ஈமப்பேழைகள் பெருங்கற்காலம்/இரும்புக்காலத்தில் இறந்தவர்களுக்காக ஈமச்சின்னங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை சுடுமண்ணால் செய்யப்பட்டவை. இவை பெருங்கற்காலச் சின்னங்களான, கல் வட்டம் மற்றும் கற்பதுக்கை ஆகியவற்றின் உள்ளே, மணலில், புதைத்து வைக்கப்பட்டிருக்கும். வடிவம் இவை செவ்வக, நீள்வட்ட வடிவில் குளியல் தொட்டியின் (Bath tub) வடிவத்தில் காணப்படும்.
இவை மூடிகளைக் கொண்டிருக்கும். இவற்றின் அடிப்பகுதியில் இரண்டு அல்லது மூன்று வரிசைகளில் கால்கள் அமைந்துள்ளன. சில அரிய வகை ஈமப்பேழைகள் விலங்கு வடிவிலும் இருக்கும். ஆந்திராவில் சங்கவரத்தில் கிடைத்த ஈமப்பேழை, ஆட்டுக்கிடா அல்லது ஆட்டின் வடிவத்தில் உள்ளது. கேரளாவில் பசு மாட்டின் வடிவில் ஓர் ஈமப்பேழை கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. காணப்படும் இடங்கள் இவை தென்னிந்தியாவில் பல ஈமச்சின்னங்களில் காணப்படுகின்றன. காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் தமிழகத்தின் வடபகுதிகளில் கிடைத்துள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சானூரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கற்பதுக்கைகளிலும் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை தாழிகள் போலப் பயன்படுத்தப்பட்டன. இறந்தவர்களின் எலும்புகள் மற்றும் பிற தொல் பொருள்கள் இவற்றின் உள்ளே வைக்கப்பட்டன. ஏன் சிலர் தாழிகளையும், சிலர் ஈமப்பேழைகளையும் பயன்படுத்தினர் என்பது புரியவில்லை. இவை தாழிகளைப் போல பரவலாகவும் அதிகமாகவும் காணப்படுவதில்லை. இவை சில இடங்களில் மட்டுமே காணப்படுகின்றன. மேற்கோள் நூல் Leshni,L.S 1974, South Indian Megalithic Burials, The Pandukal Complex. Wesbaden. |