சவ்வாது மற்றும் ஏலகிரிமலை

இம்மலை இயற்கை எழில் கொஞ்சும் காடுகள், நீரோடைகள், அருவிகள் எனக் காண்போரை பரவயப்படுத்தி வருகிறது. இம்மலையின் மேல் வீமன் அருவியும், மலையின் வடபகுதியில் அமிழ் அருவியும் மேற்குப் பகுதியில் சலகாம்பாறை அருவியும் சிறு சுற்றுலா மையங்களாக விளங்கிவருகின்றன. அமிர்தியில் உள்ள வனவிலங்கு பூங்கா சிறுவர்களுக்கு ஏற்ற சுற்றுலா மையம் ஆகும். சவ்வாது மலையின் ஒரு பகுதியான ஏலகிரி மலை வேலுர் மாவட்டத்தில் உள்ள சிறந்த சுற்றுலா தளமாக விளங்குகிறது.