தன் மதிப்பீடு : விடைகள் -
II |
|
1) |
புலவர்
குழந்தையின் தமிழ் உணர்ச்சிக்குச் சான்று
தருக. |
இராவணனை ஆடவர்களில் சிறந்தவன் என்னும் பொருளில் ‘தாமரைத் தார்அணி தமிழநம்பி’ என்று புலவர் குழந்தை குறிப்பிடுகிறார். வண்டார்குழலி பெண்களில் சிறந்தவள் என்ற கருத்தில் ‘தாமரைப் பூமுகம் தமிழநங்கை’ என்று புலவர் குழந்தை குறிப்பிடுகிறார். இவ்வாறு புலவர் குழந்தையின் தமிழ் உணர்ச்சி வெளிப்படுகிறது. |