| 
  தன் மதிப்பீடு :
 விடைகள் - II  | 
 |
| 2) | 
  இராமாயணத்திலிருந்து இராவண காவியம் காவிய 
 மாந்தர்க்குப் பெயர் சூட்டலில் 
 மாறுபட்டுள்ளதா?
 எவ்வாறு?  | 
 
| 
 
 
 
  இராமாயணம் தன் காவிய மாந்தர்க்குச் சூட்டிய சில பெயர்கள் இராவண காவியத்தில் மாறுபட்டுள்ளன. தமிழின், தமிழினத்தின் பெருமை பேசும் காப்பியமாக இராவண காவியம் இருப்பதால் இழிபொருள் தரும் சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. முறப்பல்லி என்னும் பொருள் உடைய சூர்ப்பணகை காமவல்லி எனப் பெயர் மாற்றப்பட்டாள். பெருவயிறி என்னும் பொருளுடைய மண்டோதரி வண்டார்குழலி எனப் பெயர் மாற்றம் பெற்றாள்.  |