இப்பாடத்தால் அறியும் செய்திகள் இங்குத் தொகுத்துக்
கூறப்படுகின்றன.
-
வைணவ சமயத் தொண்டர்கள் ஆழ்வார் எனப்பட்டனர்.
இறைவன் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருப்போர் என்பது
ஆழ்வார் என்பதன் பொருள்.
-
ஆழ்வார்கள் பன்னிருவர். அவருள் பொய்கையாழ்வார்,
பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்ற மூவரும் முதலாழ்வார்
எனப்படுவர்.
-
இம்மூவர்க்கும் பொதுவான வரலாறு அமைந்துள்ளது. மூவரும்
தொண்டை நாட்டில் பிறந்தோர்; வெண்பாவில் திருமாலைப்
பாடியோர்; மூவரையும் சேர்த்தே வணங்குவது வைணவ மரபு.
மூவரும் திருமாலால் திருக்கோவலூரில் ஆட்கொள்ளப்பட்டனர்.
-
மூவரும் பாடிய பிரபந்தங்கள் நாலாயிரத்தி்ல் இயற்பா என்ற
பிரிவில் அடங்கும்.
-
மூவரும் தம் பிரபந்தங்களில் திருமாலின் திருமேனி,
திருமாலின் அவதாரச் செயல்கள், அவரை வழிபடும் முறை,
வழிபடுவதால் அடையும் பேறு முதலியவற்றை
விளக்கியுள்ளனர்.
-
ஆழ்வார்கள் ஐம்புலன்கள், எண்திசைகள், ஐம்பூதங்கள்,
வேதம், அறம் முதலிய அனைத்தையும் திருமாலாகவே
காண்கின்றனர்.
-
சிவபெருமானை முழுமுதற் பொருளாகக் கொள்வர் சைவர்.
ஆனால் ஆழ்வார்கள் சிவபெருமானிடத்தும் திருமாலையே
காண்கின்றனர். அஃதாவது, சிவனும் திருமாலின் ஒரு கூறு
என்கின்றனர்.
|